6TH TAMIL சிறகின் ஓசை

6TH TAMIL சிறகின் ஓசை

6TH TAMIL சிறகின் ஓசை

6TH TAMIL சிறகின் ஓசை

  • மனிதர்கள் பொருள் தேடுவதற்காக வேறு ஊர்களுக்குச் செல்கிறார்கள்
  • சிலர் திரும்புகிறார்கள். சிலர் அங்கேயே தங்குகிறார்கள்.
  • மனிதர்களைப் போலவே பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன.
  • பறவைகள் போகாத நாடுகள் இல்லை; மலைகள் இல்லை; நீர்நிலைகள் இல்லை;

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வலசை போதல் என்றால் என்ன

6TH TAMIL சிறகின் ஓசை
6TH TAMIL சிறகின் ஓசை
  • பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் பறக்கின்றன.
  • அவை பெருங்கடல்களையும் மலைகளையும் கடந்து போகின்றன;
  • குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்கின்றன.
  • இவ்வாறு பறவைகள் இடம் பெயர்தலை வலசை போதல் என்பர்.
  • நீர்வாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன.

பறவைகள் இடம்பெயர்வதர்கான காரணம்

  • பெரும்பாலும் பறவைகள் இடம் பெயர்வதற்கான காரணங்களாக இருப்பவை,
    • உணவு
    • இருப்பிடம்
    • தட்பவெப்பநிலை மாற்றம்
    • இனப்பெருக்கம்

எவற்றை அடிப்படையாக கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன

  • பறவைகள் எவற்றை அடிப்படையாக கொண்டு இடம் பெயர்கின்றன = நிலவு, விண்மீன், புவிஈர்ப்புப் புலம்.
  • பொதுவாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.
6TH TAMIL சிறகின் ஓசை
6TH TAMIL சிறகின் ஓசை

வலசையின்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • தலையில் சிறகு வளர்தல்
  • இறகுகளின் நிறம் மாறுதல்
  • உடலில் கற்றையாக முடி வளர்தல்
  • ஒருவகைப் பறவை வேறுவகைப் பறவையாக உருமாறித் தோன்றும் அளவிற்குக்கூடச் சில நேரங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

தமிழ் இலக்கியங்களில் வலசை போதல்

  • ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் “நாராய், நாராய், செங்கால் நாராய்” என்னும் பாடலை எழுதியுள்ளார்.
  • அப்பாடலில் உள்ள “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்னும் அடிகள் பறவைகள் வலசை வந்த செய்தியைக் குறிப்பிடுகின்றன.
  • பறவைகள் வலசை போதல் பற்றி பாடிய தமிழ் புலவர் = சத்திமுத்தப்புலவர்.
6TH TAMIL சிறகின் ஓசை
6TH TAMIL சிறகின் ஓசை

சிட்டுக்குருவி

உலகச் சிட்டுக் குருவிகள் நாள் மார்ச் – 20

  • பறவைகளில் வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் = சிட்டுக்குருவி.
  • சிட்டுக்குருவியின் நிறம் = பழுப்பு நிறம்.
  • ஆண்குருவியின் தொண்டைப்பகுதி கறுப்பு நிறத்தில் இருக்கும்.
  • உடல்பகுதி அடர்பழுப்பாக இருக்கும்.
  • பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும்.
  • சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது.
  • கூடுகட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும்.
  • கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும்.
  • பதினான்கு நாள்கள் அடைகாக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.
  • துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன.
  • சிட்டுக்குருவிகள் வாழ முடியாதப் பகுதி = துருவப் பகுதி.
  • இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன.
  • தானியங்கள், புழுபூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக் குருவிகளின் உணவாகும்.
  • சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும்.
  • அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும்.
  • சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும்.
  • சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும்.

சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணங்கள்

  • மனிதர்கள் விவசாயத்திற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் குருவிக் குஞ்சுகளுக்கு உணவான புழுபூச்சிகள் கிடைப்பதில்லை.
  • நவீன கட்டடங்கள் குருவிகள் கூடு கட்ட ஏற்றவையாக இல்லை.
  • தற்காலத்தில் தாவர வேலிகளுக்கு மாற்றாகச் செயற்கை வேலிகள் அமைக்கப் படுகின்றன. எனவே சிட்டுக்குருவிகள் வாழ உகந்த வேலித் தாவரங்கள் குறைந்துவிட்டன.
  • சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர்ச்செடிகளும் இல்லை.
  • உணவுக்கும், இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகளுடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றன.

இந்தியாவின் பறவை மனிதர்

6TH TAMIL சிறகின் ஓசை
6TH TAMIL சிறகின் ஓசை
  • இன்றைய பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி.
  • தம் வாழ்நாள் முழுவதும் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் அவற்றைப் படம் பிடிப்பதிலும் ஈடுபட்டார்.
  • அதனால், அவர் ‘இந்தியாவின் பறவை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
  • பறவைகள் குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார்.
  • தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
  • “மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழமுடியும்! பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது!” என்று கூறியவர் = இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி.

ஆர்டிக் ஆலா

6TH TAMIL சிறகின் ஓசை
6TH TAMIL சிறகின் ஓசை
  • உலகிலேயே நெடுந் தொலைவு 22,000கி .மீ.பயணம் செய்யும் பறவையினம் = ஆர்டிக் ஆலா.

ஆர்னித்தாலஜி

  • பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி (ORNITHOLOGY) எனப்படும்.

கப்பல் பறவை

  • சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை (Frigate bird).
  • இது தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும்.
  • இது கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

 

 

 

Leave a Reply