7TH TAMIL ஒப்புரவு நெறி

7TH TAMIL ஒப்புரவு நெறி

7TH TAMIL ஒப்புரவு நெறி

7TH TAMIL ஒப்புரவு நெறி

  • மனிதர்கள் தனித்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். சமுதாயமாகக் கூடி வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழப்பிறந்தவர்கள்.
  • பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம் உதவுவதே சிறந்த பண்பாகும்
  • அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வாழ்வின் குறிக்கோள்

  • வாழ்க்கை, தொண்டினையே குறிக்கோளாக உடையது.
  • இந்தக் குறிக்கோளுடன்தான் ஒப்புரவு நெறியைத் திருக்குறள் அறிமுகப்படுத்துகிறது.
  • திருவள்ளுவரின் வாழும் நெறி = ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடைமை நெறி.
7TH TAMIL ஒப்புரவு நெறி
7TH TAMIL ஒப்புரவு நெறி

ஒப்புரவின் இயல்பு

  • ஒப்புரவில் ஈதல்- ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உறவு இல்லை.
  • ஒப்புரவுநெறி சார்ந்த வாழ்க்கை உரிமையும் கடமையும் உடைய வாழ்வு முறையாக அமைவதால் கடமைகள் உரிமைகளை வழங்குகின்றன.

பொருள்ஈட்டலும் ஒப்புரவும்

  • பொருள் ஈட்டலிலும் அந்தப் பொருளை நுகர்தலிலும் அறிவியல் பாங்கு தேவை.
  • வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும்.
  • வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் என்று கூறியவர் = அப்பரடிகள்.
  • “உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்” என்று கூறியவர் = பாரதிதாசன்.
  • செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை.
  • இரப்பார்க்கு இல்லென்று இயைவது கரத்தல் அறிவியல் அன்று; அறமும் அன்று.
  • வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு.
  • செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்குச் சமம் என்று கூறும் நூல் = புறநானூறு.
  • “செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.

ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்

7TH TAMIL ஒப்புரவு நெறி
7TH TAMIL ஒப்புரவு நெறி
  • “ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” என்கிறார் திருவள்ளுவர்.
  • உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.
  • “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்” என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
  • நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

  • மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
  • குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.
  • திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.
  • நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார்.

 

 

 

 

 

Leave a Reply