7TH TAMIL அறம் என்னும் கதிர்

7TH TAMIL அறம் என்னும் கதிர்

7TH TAMIL அறம் என்னும் கதிர்

7TH TAMIL அறம் என்னும் கதிர்

  • இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும்.
  • இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்
  • அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும்.
  • அறநெறிகளை இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறுகிறார் = முனைப்பாடியார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அறநெறிச்சாரம் பாடல்

7TH TAMIL அறம் என்னும் கதிர்
7TH TAMIL அறம் என்னும் கதிர்

இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக

வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி

அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்

பைங்கூழ் சிறுகாலைச் செய்

–    முனைப்பாடியார்

அருஞ்சொற்பொருள்

  • வித்து = விதை
  • ஈன = பெற
  • நிலன் = நிலம்
  • களை = வேண்டாத செடி
  • பைங்கூழ் = பசுமையான பயிர்
  • வன்சொல் = கடுமையான சொல்

பாடலின் பொருள்

  • விளைநிலம் = இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும்
  • விதை = ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும்
  • களை = வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்
  • எரு = உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும்
  • நீர் = அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்
  • கதிர் = அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும்.

முனைப்பாடியார் ஆசிரியர் குறிப்பு

  • முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
  • இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
  • முனைப்பாடியார் எழுதிய நூல் = அறநெறிச்சாரம்.

அறநெறிச்சாரம் நூல் குறிப்பு

  • முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.
  • அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது.

 

 

 

 

 

 

Leave a Reply