8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்

8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்

8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்

8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்

  • ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது பழமொழி. அதற்குப் பழந்தமிழர்களே சான்றுகளாக விளங்கினர்.
  • காலத்தால் முற்பட்டவர்களான பழந்தமிழர் சோம்பித் திரிந்தவர் அல்லர்.
  • உழைத்து உயர்ந்து வாழ்க்கையில் இன்பங்காணுவதிலேயே கண்ணுங்கருத்துமாய் விளங்கினர் என்பர்.
  • அவர்கள் மலைகளுடனும் காடுகளுடனும் கடலுடனும் கலந்து உறவாடினர்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு

  • “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் = தொல்காப்பியம்.
  • தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றன.

சேரர்களே பழமையானவர்கள்

8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
  • முடியுடைய மூவேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள் என்று கூறுபவர் உண்டு.
  • சேர, சோழ, பாண்டியர் என்னும் தொடரையே இதற்குச் சான்றாகக் காட்டுவர்.
  • “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” எனக் குறிப்பிடும் நூல் = தொல்காப்பியம்.

சேரர்களின் நாடு குடநாடு

  • சேரர்களின் நாடு = குடநாடு.
  • சேரர்களின் தலைநகரம் = வஞ்சி.
  • வஞ்சி நகரம் = மேற்கு மலைத்தொடரில் துவங்கி பேரி ஆற்றங்கரை வரை அமைந்துள்ளது.
  • வஞ்சி நகரின் வேறு பெயர் = கருவூர்.
  • சேர நாட்டின் துறைமுகங்கள் = தொண்டி, முசிறி, காந்தளூர்.
  • சேரர்களின் கொடி = விற்கொடி.
  • சேரர்களின் பூ = பனம்பூ.

சேர நாட்டின் எல்லைகள்

  • சேர நாடு = இன்றைய கேரளப் பகுதிகளும், தமிழ்நாட்டின் சேலம், கோவை மாவட்டங்களின் பகுதிகளும்.

கொங்குநாடு

  • கொங்குநாடு = சேலம், கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள்.
  • கொங்குநாடு பகுதிகளை ஆண்டவர்கள் = சேரர்களின் உறவினர்கள் ஆட்சி செய்தனர்.

கொங்கு மண்டலம்

  • “கொங்கு மண்டலச் சதகம்” என்னும் நூலின் ஆசிரியர் = கார்மேகக் கவிஞர்.
  • கொங்கு மண்டல எல்லைகளை கூறும் நூல் = கொங்கு மண்டலச் சதகம்.
  • கொங்குநாடு எல்லைகள் = கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டலச் சதகம் என்னும் நூலில் வடக்கே பெரும்பாலை, தெற்கே பழனிமலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கரை என இந்நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதியாகக் கொங்குமண்டலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.
  • இன்றைய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களையும் சேலம், கரூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகக் கொங்குமண்டலம் விளங்கியது என்பர்.
  • கொங்குநாட்டுப் பகுதியை காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை என்று அழைக்கப்படும் அமராவதி ஆகிய ஆறுகள் வளம் செழிக்கச் செய்கின்றன.
  • ஆன்பொருநை என அழைக்கப்படும் ஆறு = அமராவதி ஆறு.
8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்

பழங்கால வணிகம்

  • கடல் வணிகத்தில் சேரநாடு சிறப்புற்று இருந்ததற்கு காரணம் = அந்நாட்டின் இயற்கை அமைப்பு.
  • சேரர்கள் வலிமை மிகுந்த கப்பல் படையை வைத்திருந்தனர்.
  • செங்குட்டுவனின் கடற்போர் வெற்றியால் அவன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று அழைக்கப்பட்டான்.
  • கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களைச் சேர மன்னர்கள் அடக்கினர்.

சேர நாட்டில் இருந்து ஏற்றுமதி இறக்குமதி

  • சேர நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை = மிளகு, முத்து, யானைத் தந்தங்கள், பட்டு, மணி
  • பிற நாடுகளில் இருந்து சேர நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவை = பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை.
  • சேரநாட்டில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட பொருட்களின் விவரத்தை “புறநானூறு” கூறுகிறது.

மீனோடு நெற்குவைஇ

மிசையம்பியின் மனைமறுக்குந்து

—————————-

—————————-

கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணியால் கரைசேர்க்குந்து – புறம் 343:1- 8

உப்பும் நெல்லும் ஒரே மதிப்பு உடையவை

  • நெல்லே விலையைக் கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர்.
  • பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது = நெல்.
  • உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன.

நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

  • உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை,

நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

கொள்ளீரோவெனச் சேரிதொறும் நுவலும் – (அக. 390)

  • “நெல்லும் உப்பும் நேரே ஊரீர்” என்ற பாடல் இடம்பெற்ற நூல் = அகநானூறு.
  • உப்பும் நெல்லும் ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை கூறும் நூல் = அகநானூறு.

நீலகிரி மாவட்டம்

8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
  • கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி ஆகும்.
  • தோட்டப்பயிர்களான காப்பி, தேயிலை, உருளைக்கிழங்கு, கேரட், முட்டைகோசு ஆகியவை பெருமளவில் பயிரிடப்படுகின்றன;
  • தைலமரம் (யூகலிப்டஸ்) வளர்க்கப்படுகிறது.
  • நீலகிரி மாவட்டம் தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்தது.
  • புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை, துப்பாக்கி வெடிமருந்துத் தொழிற்சாலை, தைலமரம் (யூகலிப்டஸ்) எண்ணெய்த் தொழிற்சாலை ஆகியனவும் உள்ளன.

கோயம்புத்தூர்

8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
  • கோவன்புத்தூர் என்னும் பெயரே கோயம்புத்தூர் என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.
  • பயிர்த்தொழில் = நெல், வாழை, கரும்பு, காய்கறிகள், பூக்கள்
  • தொழிற்சாலைகள் = பஞ்சாலைகள், நூற்பாலைகள், மின்சாரப் பொருள்கள், எந்திரங்கள், வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்.
  • வீட்டுஉபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் = கோயம்புத்தூர்.

திண்டுக்கல்

  • பயிர் வகைகள் = நெல், சோளம், தினை வகைகள், வாழைப்பழம், காய்கறிகள்
  • தொழிற்சாலைகள் = அரிசி, தோல், பூட்டுத் தொழிற்சாலைகள்
  • திண்டுக்கல் மாவட்டம் மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. எனவே “தமிழ்நாட்டின் ஹாலந்து” என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
  • “தமிழ்நாட்டின் ஹாலந்து” என அழைக்கப்படும் மாவட்டம் = திண்டுக்கல்.
  • திண்டுக்கல் சின்னாளபட்டிச் சுங்குடிச் சேலைகள் புகழ்பெற்றவை.

ஈரோடு

8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
  • பரப்பளவில் ஈரோடு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம்.
  • பயிர் வகைகள் = நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, பருத்தி, எள்
  • தொழிற்சாலைகள் = துணி நூற்பாலைகள், எண்ணெய் ஆலைகள், சர்க்கரை ஆலைகள், நூல் நூற்பு, துணிகளுக்குச் சாயம் ஏற்றுதல், அச்சிடுதல், தோல் பதனிடுதல்.
  • தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை ஈரோட்டில்தான் நடைபெறுகின்றது.

திருப்பூர்

8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
  • “பின்னலாடை நகரம்” என அழைக்கபடும் நகரம் = திருப்பூர்.
  • பயிர் வகைகள் = நெல், கரும்பு, பருத்தி, வாழை
  • தொழிற்சாலைகள் = பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள்
  • இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • “காங்கேயம் காளைகள்” இந்திய அளவில் புகழ் பெற்றவை ஆகும்.

நாமக்கல்

8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
8TH TAMIL கொங்குநாட்டு வணிகம்
  • பச்சைமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலையின் ஒரு பகுதி ஆகியவை இம்மாவட்டத்தில் உள்ளன.
  • பயிர் வகைகள் = நெல், கரும்பு, சோளம், நிலக்கடலை, பருத்தி, மலைப்பகுதிகளில் விளையும் திராட்சை, ஆரஞ்சு, காப்பி, பாக்கு, ஏலம்
  • முட்டைக்கோழி வளர்ப்பிலும் முட்டை உற்பத்தியிலும் தென்னிந்தியாவிலேயே நாமக்கல் முதன்மையான இடம் வகிக்கின்றது.
  • தொழிற்சாலைகள் = சிமெண்ட், காகிதத் தொழிற்சாலைகள், கைத்தறி நெசவு, வெண்கலப் பொருள்கள்.
  • சிற்றுந்து, சரக்குந்து ஆகியவை அதிக அளவில் இயங்கும் மாவட்டமாக நாமக்கல் விளங்குகிறது.

சேலம்

  • “மாங்கனி நகரம்” என அழைக்கப்படும் நகரம் = சேலம்.
  • பயிர் வகைகள் = நெல், பருப்பு வகைகள், பருத்தி, கரும்பு, மாம்பழம், காப்பி, பாக்கு.
  • இந்தியாவிலேயே இம்மாவட்டத்தில்தான் ஜவ்வரிசி அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகின்றது.
  • தமிழ்நாட்டில் கைத்தறி நெசவு அதிகமாக உள்ள மாவட்டம் இதுவே.
  • இரசாயனப் பொருள், அலுமினியம், சந்தன எண்ணெய், வனஸ்பதி ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் நிறைந்த மாவட்டமாகவும் சேலம் விளங்குகிறது.
  • முலாம் பூசும் தொழிலும் பெருமளவில் நடைபெறுகிறது.
  • ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கரூர்

  • “வஞ்சிமாநகரம்” என அழைக்கப்பட பகுதி = கரூர் மாவட்டம்.
  • கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • பயிர் வகைகள் = நெல், சோளம், கேழ்வரகு, கம்பு, கரும்பு
  • தொழிற்சாலைகள் = கல்குவாரித் தொழிற்சாலைகள், கைத்தறி நெசவு ஆடைகள், தோல் பதனிடுதல், சாயமேற்றுதல், கற்சிற்ப வேலைகள்.
  • பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாகக் கரூர் விளங்குகிறது.

ஊர்களும் சிறப்புப் பெயர்களும்

  • தூத்துக்குடி = முத்து நகரம்
  • சிவகாசி = குட்டி ஜப்பான்
  • மதுரை = தூங்கா நகரம்
  • திருவண்ணாமலை = தீப நகரம்
  • ஏற்காடு = ஏழைகளின் ஊட்டி
  • சேலம் = மாங்கனி நகரம்
  • திண்டுக்கல் = தமிழ்நாட்டின் ஹாலந்து.

 

 

Leave a Reply