SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்
SAMACHEER KALVI 12TH TAMIL காப்பிய இலக்கணம்
- காப்பியம் என்றவுடன் நினைவு வருவது சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி ஆகிய நூல்கள் ஆகும்.
காப்பியம் எத்தனை வகைப்படும்
- காப்பியம் இரண்டு வகைப்படும். அவை,
காப்பியம் பெயர்க்காரணம்
- காப்பியம் ஆங்கிலத்தில் EPIC என்பர். இது EPOS என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது.
- EPOS = சொல் (அல்லது) பாடல் என்று பொருள்
- வடமொழியில் இதனை “காவியம்” என்று கூறுவார்.
காப்பியம் என்றால் என்ன
- காப்பியம் = காப்பு + இயம்
- காப்பியம் = மரபைக் காப்பது, இயம்புவது, வெளிப்படுத்துவது என்றும், மொழியை சிதையாது காப்பது என்றும் காரணம் கூறுவார்
ஐம்பெரும்காப்பியங்கள்
- உரைகளிலும் இலக்கிய நூல்களிலும் பஞ்சகாப்பியம், பஞ்சகாவியம் ஆகிய சொற்றொடர்களும் பெருங்கப்பிய நூல்களை குறிப்பிடுகிறது
- மயிலைநாதர் = நன்னூலுக்கு உரை எழுதிய “மயிலை நாதர்”, தம் உரையில் “ஐம்பெருங்காப்பியம்” என்னும் சொற்றொடரை பயன்படுத்தி உள்ளார்
- பஞ்சகாப்பியம் = பஞ்சகாப்பியம் என்னும் சொற்றொடரை “தமிழ் விடு தூது” நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது
- பெருங்காப்பியம் ஐந்து = “பொருள்தொகை நிகண்டு” மற்றும் “திருத்தணிகை உலா” ஆகிய நூல்களில், பெருங்காப்பியம் ஐந்து என்று கூறி அவற்றில் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது
ஐஞ்சிறுகாப்பியங்கள்
- சிறுகாப்பியங்கள் ஐந்து என்று வழங்கும் வழக்கம் சி.வை. தாமோதனார் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது என்பது அவர் பதிப்பித்த சூளாமணி (1895) பதிப்புரையில் இருந்து அறிய முடிகிறது
காப்பியம் வேறு பெயர்கள்
- காப்பியம் என்ற சொல்லை குறிக்கும் பிற சொற்களாவன,
- பொருட்டொடர்நிலைச் செய்யுள்
- கதைச் செய்யுள்
- அகலக்கவி
- தொடர்நிலைச் செய்யுள்
- விருத்தச் செய்யுள்
- உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்
- மகாகாவியம்
காப்பிய அமைப்பு முறை
- காப்பிய சிற்றுறுப்புகள் = காதை, சருக்கம், இலம்பகம், படலம்
- காப்பிய பேருறுப்பு = காண்டம் (பல சிறிய உறுப்புகளின் தொகுதி)
காப்பிய இலக்கணம்
- கப்பிய இலக்கணம் கூறும் நூல் = தண்டியலங்காரம்
- வடமொழியில் “காவ்யதரிசம்” என்ற நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட அணி இலக்கண நூல் = தண்டியலங்காரம்
- இந்நூலில், பெருங்காப்பியம் சிறுங்காப்பியம் என்று இருவகையாகப் பிரிக்கப்பட்டு காப்பிய இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
- காப்பியங்கள் ஒரே வகைச் செய்யுளாலும் அமையும்; பல்வகைச் செய்யுட்களாலும் அமையும் என்கிறது தண்டியலங்காரம்
பெருங்காப்பிய இலக்கணம்
தொடக்கம் |
1. வாழ்த்துதல்
2. தெய்வத்தை வணங்குதல் 3. வருபொருள் உரைத்தல் – ஆகிய மூன்றில் ஒன்றினைத் தொடக்கத்தில் பெற்று வரும். அவற்றுள் இரண்டோ மூன்றோ வரலாம் |
திரண்ட பொருள் |
1. அறம்
2. பொருள் 3. இன்பம் 4. வீடு
|
காப்பியத் தலைவன் |
தன்னிகர் இல்லாத் தன்மை உடையவனைக் காப்பியத் தலைவனாகக் கொண்டிருத்தல் வேண்டும். |
இயற்கை வருணனை உறுப்புகள் |
1. மலை – 1
2. கடல் – 1 3. நாடு – 1 4. நகர் – 1 5. சிறுபொழுது – 6 6. பெரும்பொழுது – 6 7. கதிரவன் தோற்றம் – 1 8. சந்திரனின் தோற்றம் – 1 ஆகிய பதினெட்டு உறுப்புகளும் இயற்கை வருணனைகளாக அமைதல் வேண்டும் |
முக்கிய நிகழ்வுகள் |
1. திருமணம் புரிதல்
2. மக்களைப் பெற்றெடுத்தல் 3. முடிசூடல் முதலான நிகழ்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். |
பிற நிகழ்வுகள் |
1. அமைச்சர்களுடன் கலந்துரையாடல்
2. தூது செல்லல் 3. போர்ப் புரிய படைகள் அணிவகுத்தல் 4. போர்நிகழ்ச்சி 5. வெற்றி பெறுதல் · போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுதல் வேண்டும். |
சந்தி |
சந்தி எனப்படும் கதைப்போக்கு (தொடக்கம், வளர்ச்சி, விளைவு, முடிவு என்பவை) வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும். |
அமைப்பு முறை |
அமைப்பு முறையில் பெருங்காப்பிய உட்பிரிவுகளுள்
என்ற பெயர்களில் ஒன்றைப் பெற்றிருத்தல் வேண்டும் |
சுவை |
|
சீவக சிந்தாமணி
- பெருங்காப்பியத்திற்குரிய நான்கு வகை உறுதிப் பொருள்களும் பிற உறுப்புகளும் முழுமையாக அமைப்பெற்ற நூல் என்ற சிறப்பை பெற்ற ஒரே நூல் = சீவக சிந்தாமணி மட்டுமே ஆகும்
சிறுகாப்பிய இலக்கணம்
- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினுள் ஒன்றோ இரண்டோ குறைந்து வருவது சிறுகாப்பியம் ஆகும்
பாவிகம்
- காப்பியத்தின் பண்பாகப் ‘பாவிகம்’ என்பதைத் தண்டியலங்காரம் குறிக்கின்றது.
- பாவிகம் = காப்பியத்தில் கவிஞன் வலியுறுத்த விரும்பும் அடிப்படைக் கருத்து
- சிலப்பதிகாரத்தின் பாவிகம் = “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்”
- கம்பராமாயண பாவிகம் = “பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப”
தண்டியலங்காரம்
- அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம் ஆகும். இந்நூல் “முத்தம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளைக் கூறுகிறது.
- இந்நான்கனுள் தொடர்நிலை என்னும் வகை, காப்பியத்தைக் குறிக்கிறது
தொடர்நிலை
- தொடர்நிலை ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொன்னாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள்வகையைக் குறிக்கும்.
- இது இருவகைப்படும், அவை
- பொருள்தொடர்நிலை = சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
- சொல்தொடர்நிலை = அந்தாதி இலக்கியங்கள்
ஒரே வகை, பல்வகை
- விருத்தம் என்னும் ஒரே வகை செய்யுளில் அமைந்த காப்பியங்கள் = சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகும்
- பாட்டும் உரைநடையும் கலந்து பல்வகைச் செய்யுள்களில் அமைந்தது = சிலப்பதிகாரம்
தற்கால காப்பியங்கள்
பாஞ்சாலி சபதம்
குயில்பாட்டு |
|
|
பாண்டியன் பரிசு
தமிழச்சியின் கத்தி இருண்ட வீடு எதிர்பாராத முத்தம் சஞ்சீவி பர்வதத்தின் சாரல் வீரத்தாய் புரட்சிக்கவி |
மருமக்கள் வழி மான்மியம் | |
ஆட்டனத்தி ஆதிமந்தி
மாங்கனி ஏசுகாவியம் |
|
கவியோகி சுத்தானந்தபாரதி |
பாரதசக்தி மகா காவியம் |
புலவர் குழந்தை |
இராவண காவியம் |
- SAMACHEER KALVI 12TH TAMIL நடிகர் திலகம்
- SAMACHEER KALVI 12TH TAMIL மெய்ப்பாட்டியல்
- SAMACHEER KALVI 12TH TAMIL சிலப்பதிகாரம்
- SAMACHEER KALVI 12TH TAMIL கவிதைகள்
- SAMACHEER KALVI 12TH TAMIL திரைமொழி
- SAMACHEER KALVI 12TH TAMIL சோமசுந்தர பாரதியார்
- SAMACHEER KALVI 12TH TAMIL படிமம்
- SAMACHEER KALVI 12TH TAMIL தலைக்குளம்
- SAMACHEER KALVI 12TH TAMIL அகநானூறு
- SAMACHEER KALVI 12TH TAMIL தேவாரம்