11TH TAMIL காவடிச்சிந்து

11TH TAMIL காவடிச்சிந்து

11TH TAMIL காவடிச்சிந்து
11TH TAMIL காவடிச்சிந்து

11TH TAMIL காவடிச்சிந்து

  • காவடி தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்று.
  • உலகெங்கும் வாழும் தமிழர்கள் குன்றுதோறும் வீற்றிருக்கும் முருகன் கோவில்களில் காவடி எடுத்து ஆடுவது வழக்கமாக உள்ளது.

காவடிச்சிந்து

  • தமிழ்நாட்டில் பண்டைக்காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடிச் சிந்து எனலாம்.
  • முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு செல்வோர், ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வர்.
  • அவர்களின் வழிநடைப்பாடல் வகைகளிலிருந்து காவடிச் சிந்து எனும் பாவடிவம் தோன்றியது.
  • இந்நூலின் தலைவன் = கழுகுமலைத் தலைவன் முருகன்

அருஞ்சொற்பொருள்

  • புயம் – தோள்
  • வரை – மலை
  • வன்னம் – அழகு
  • கழுகாசலம் – கழுகு மலை
  • துஜஸ் தம்பம் – கொடி மரம்
  • சலராசி – கடலில் வாழும் மீன் முதலிய உயிர்கள்
  • விலாசம் – அழகு
  • நூபுரம் – சிலம்பு
  • மாசுணம் – பாம்பு
  • இஞ்சி – மதில்
  • புயல் – மேகம்
  • கறங்கும் – சுழலும்.

இலக்கணக்குறிப்பு

  • தாவி – வினையெச்சம்
  • மாதே – விளி

பிரித்து எழுதுக

  • திருப்புகழ் = திரு + புகழ்
  • உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்

சென்னிகுளம் அண்ணாமலையார்

  • 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னிகுளம் அண்ணாமலையார் பாடிய காவடிச்சிந்து – அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியமாகும்.
  • இப்பாடலின் மெட்டு அண்ணாமலையாராலேயே அமைக்கப்பட்டதாகும்.
  • தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியதால், காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டார்
  • 18 வயதிலேயே ஊற்றுமலைக்குச் சென்று அங்குக் குறுநிலத்தலைவராக இருந்த இருதயாலய மருதப்பத் தேவரின் அரசவைப் புலவராகவும் இருந்தார்.
  • இவர், இந்நூல் தவிர வீரைத் தலபுராணம், வீரை நவநீத கிருஷ்ணசாமி பதிகம், சங்கரன்கோவில் திரிபந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

 

 

 

Leave a Reply