11TH TAMIL புணர்ச்சி விதிகள்

11TH TAMIL புணர்ச்சி விதிகள்

புணர்ச்சி விதிகள் யாவை

  • சொற்புணர்ச்சியின் போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களைச் சுருங்கச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.

11TH TAMIL புணர்ச்சி விதிகள்

  • மொழியைப் பிழையின்றிக் கையாளவும் பாடலடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்தறியவும் மொழி ஆளுமையைப் புரிந்து கொள்ளவும் இப்புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன.

உடம்ப்படுமெய்ப் புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் உயிரெழுத்துகளாய் இருந்தால், உச்சரிப்பின்போது ஒலி உடன்பாடு இல்லாமல் இடைவெளி ஏற்படும்.
  • எனவே, உடன்படாத அவ்விரு மொழிகளையும் சேர்த்துப் புணர்க்க வரும் மெய், உடம்படுமெய் ஆகும்.
  • பதினெட்டு மெய்களுள் ய், வ் ஆகிய இரு மெய்கள் மட்டும் உடம்படுமெய்களாக வரும்.
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
11TH TAMIL புணர்ச்சி விதிகள்

குற்றியலுகரப் புணர்ச்சி என்றால் என்ன

  • குற்றியலுகரச்சொற்களில் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உள்ள உயிரெழுத்துடன் புணரும்போது, தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும்.
  • பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய், வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
  • ட், ற் என்னும் இரு மெய்களோடு ஊர்ந்துவரும் நெடில்தொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரங்கள் வருமொழியோடு சேரும்போது ஒற்று இரட்டித்துப் புணரும்.
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
11TH TAMIL புணர்ச்சி விதிகள்

முற்றியலுகரப் புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியின் இறுதியில் உள்ள முற்றியலுகரமும் குற்றியலுகரத்தைப் போலவே தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும்.
  • பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய் வருமொழி முதலெழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
11TH TAMIL புணர்ச்சி விதிகள்
11TH TAMIL புணர்ச்சி விதிகள்

இயல்பீறு, விதியீறு – புணர்ச்சி

  • இயல்பீறாகவோ விதியீறாகவோ வரும் நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிரெழுத்துடன், க ச த ப என்னும் வல்லின மெய்களை முதலில் கொண்ட வருமொழிச்சொல் சேரும்போது அவற்றிடையே வல்லொற்று மிகுந்து புணரும்.

பூப்பெயர்ப் புணர்ச்சி என்றால் என்ன

  • பூ என்னும் சொல் நிலைமொழியாய் நிற்க வருமொழியின் முதலில் வல்லின மெய்யெழுத்துகள் வரும்போது வல்லினமெய் மிகுந்து புணர்வது மட்டுமன்றி, அவற்றிற்கு இனமான மெல்லின மெய் மிகுதலும் உண்டு.
  • எனினும், மெல்லின மெய் மிகுதலே பெருவழக்காக உள்ளது.

மெய்யீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியீற்றின் இறுதி எழுத்து, மெய்யெழுத்தாக நிற்க வருமொழியின் முதலாக வரும் உயிரெழுத்துடனும் மெய்யெழுத்துடனும் சேரும் புணர்ச்சியை மெய்யீற்றுப் புணர்ச்சி என்பர்.

தனிக்குறில்முன் ஒற்று – புணர்ச்சி

  • நிலைமொழி தனிக்குறில் சார்ந்த மெய்யெழுத்தாக நின்று, வருமொழியின் முதல் உயிரெழுத்தாக இருப்பின் நிலைமொழி ஒற்று இரட்டிக்கும்.

மகர ஈற்றுப் புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழிச் சொல்லின் இறுதி எழுத்தாக மகரமெய் வரும்போது, அச்சொல் மூன்று நிலைகளில் புணரும்.
    • மகரமெய் கெட்டுப் புணரும்
    • மகரமெய் கெட்டு இன மெல்லெழுத்துத் தோன்றிப் புணரும்.
    • மகரமெய் கெட்டு வல்லினம் மிக்குப் புணரும்.

பண்புப்பெயர்ப் புணர்ச்சி என்றால் என்ன

  • பண்புப்பெயர்ச்சொல் நிலைமொழிச் சொல்லாக நின்று வருமொழிச்சொல்லுடன் புணரும்போது பின்வரும் மாற்றங்களை அடையும்.
    1. நிலைமொழியின் இறுதியில் உள்ள மை கெட்டுப் புணரும்.
    2. மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல்லின் இறுதியில் உள்ள உகரம் இகரமாகத் திரியும்.
    3. மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல்லின் முதலில் உள்ள குறில் எழுத்து நெடில் எழுத்தாய் மாறும்.
    4. மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல்லின் முதலில் உள்ள அகரம் ஐகாரமாக மாறும்.
    5. மை விகுதி கெட்டு நிலைமொழிச் சொல் ஒற்று இரட்டிக்கும்.
      • பண்புப்பெயர்ப் புணர்ச்சியில் தன்னொற்றிரட்டல் என்னும் விதியைப் பயன்படுத்த வேண்டும்.
    6. ஈறுபோதல் விதியின்படி மை கெட்டு நிலைமொழியின் இறுதி எழுத்து மகர மெய்யாக இருந்தால் ‘முன் நின்ற மெய் திரிதல்’ விதியின்படி புணரும்.
    7. ஈறுபோதல்விதியின்படிமைவிகுதிகெட்டு, நிலைமொழியின் இறுதி எழுத்து உயிரெழுத்தாய் இருந்து வருமொழி வல்லின மெய்யாக இருப்பின் ‘இனமிகல்’ விதியின்படி புணரும்.
    8. மை விகுதி கெட்டு நிற்கும் நிலைமொழியின் இறுதி எழுத்து மேற்சொன்ன எவ்விதியிலும் பொருந்தாதிருப்பின் இனையவும் என்னும் விதியைப் பயன்படுத்த வேண்டும்.

 

 

 

 

Leave a Reply