11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு

Table of Contents

11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு

11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு
11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு

11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு

  • கல்வியின் நோக்கம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பதாகும்.
  • பன்னெடுங்காலமாக முன்னோர்களால் வளப்படுத்தப்பட்ட அறிவாற்றலையும் அனுபவத்தையும் ஒவ்வொரு தனிமனிதனும் பெறுமாறு செய்வதுமாகும்.
  • ஒருவரின் வாழ்க்கை முழுவதும் தொடர் நடைமுறையாகத் திகழும் கல்வியானது சமூக மாற்றத்தின் இன்றியமையாக் காரணியாகவும் விளங்குகிறது.
  • கல்வியின் முதன்மையான நோக்கம் = ‘தனிமனிதனைச் சமுதாயத்துக்கு ஏற்றவனாக மாற்றுதல்’.

கல்லுதல்

  • கற்பவர் மனத்தில் ஆழப் புதைந்துள்ள திறன்களைத் தோண்டி வெளிக்கொண்டு வருவதால் ‘கல்லுதல்’ என்ற பொருளின் அடிப்படையில் கல்வி வழங்கப்படுகிறது.

ஓதற்பிரிவு என்பது யாது

தொல்காப்பிய மெய்ப்பாடு

  • தொல்காப்பியம், எண்வகை மெய்ப்பாடு பற்றிக் கூறும்போது கல்வியின் பொருட்டு ஒருவருக்கு, ‘பெருமிதம்’ தோன்றும் (தொல்.மெய். 9) என்றும் கூறுகிறது.

தொல்காப்பியமும் நன்னூலும்

தமிழ் இலக்கியங்களில் கல்வியின் சிறப்பு

11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு
11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு
  • “துணையாய் வருவது தூயநற் கல்வி” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = திருமந்திரம்
  • “கல்வி அழகே அழகு” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நாலடியார்
  • “இளமையில் கல்” என்று கூறியவர் = ஔவையார்

தமிழ் இலக்கியங்களில் கல்வி

உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!”

                  (புறநானூறு. 183, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்)

  • இப்புறநானூற்று அடிகள் பொருள் கொடுத்தும், தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதைச் சிறப்புடன் குறிக்கின்றன.
  • சங்க காலத்தவர் குடும்பம், அரசு, சமூகம் என்ற மூன்று நிலைகளிலும் சிறப்பினைப் பெறக் கல்வி தேவை என்பதனை உணர்ந்து கற்றனர்.

கல்வி பற்றி மா. இராசமாணிக்கனார் கூற்று

  • “சங்ககாலத் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, இலக்கிய மொழியாக விளங்கியுள்ளது; தமிழகம் அப்போது பெற்றிருந்த அரசியல் சுதந்திரத்தினால், தமிழ்நாடெங்கும் தமிழே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் சமயம், வாணிகம் போன்ற எல்லாத் துறைகளிலும் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது” என்னும் மா. இராசமாணிக்கனாரின் கருத்து, தமிழகத்தில் அன்று நிலவிய கல்வி முறையின் சிறப்பினை எடுத்துக் கூறுகிறது.

மூவகை ஆசிரியர்கள்

  • கற்பிக்கும் ஆசிரியரை மூன்று வகையாக பிரித்தனர்.
  • அவர்கள் “கணக்காயர், ஆசிரியர் மற்றும் குறவர்” என்று அழைத்தனர்.
    1. கணக்காயர் = எழுத்தும் இலக்கியமும் உரிச்சொல்லும் (நிகண்டு ) கணக்கும் கற்பிப்போர்.
    2. ஆசிரியர் = பிற்காலத்தில் ஐந்தாக விரிக்கப் பட்ட மூவகை இலக்கணத்தையும் அவற்றுக்கு எடுத்துக்காட்டான பேரிலக்கியங்களையும் கற்பிப்போர்.
    3. குரவர் = சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர்.

மூவகை மாணாக்கர்

  • மாணாக்கர்களை மூன்று வகையாக பிரித்தனர்.
  • மூன்று வகையாக ஆசிரியர்களிடம் கற்ற மாணவர்களை முறையே சிறுவன், மாணவன் மற்றும் கேட்போன் என்றனர்.
  • அதாவது,
    1. கணக்காயரிடம் கற்பவன் = சிறுவன்
    2. ஆசிரியரிடம் கற்பவன் = மாணவன்
    3. குரவரிடம் கற்பவன் = கேட்போன்

திரிகடுகம் கூறும் ஆசிரியரின் சிறப்பு

11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு
11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு

கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்

மூத்தோரை இல்லா அவைக்களனும்-பாத்துண்ணும்

தன்மை யிலாளர் அயலிருப்பும் இம்மூன்றும்

நன்மை பயத்தல் இல் (திரிகடுகம் – 11)

கல்வி கற்பிக்கப்படும் இடங்கள்

  • கல்வி கற்பிக்கப்படும் இடங்களை “பள்ளி” என்று கூறிய நூல் = பெரிய திருமொழி
  • கல்வி கற்பிக்கப்படும் இடங்களை “ஓதும் பள்ளி” என்று கூறிய நூல் = திவாகர நிகண்டு
  • கல்வி கற்பிக்கப்படும் இடங்களை “கல்லூரி” என்று கூறிய நூல் = சீவக சிந்தாமணி

கல்வி தொடர்பான இடங்கள்

  • “பள்ளிகள்” என்பது = “கலைகள், கல்வி போன்றவற்றைக் கற்பிக்கும் இடங்களாக விளங்கியவை” பள்ளிகள் எனப்பட்டன.
  • “மன்றம்” என்பது = மன்றம் என்பது “கற்ற வித்தைகளை அரங்கேற்றும் இடமாகத் திகழ்ந்ததவை” ஆகும்.
  • “சான்றோர் அவை” என்றால் என்ன = சான்றோர் அவை எனப்படுவது, “செய்த செயல்களை சீர்தூக்கிப் பார்க்கும் அவையாக இருந்தது”.

கற்றலுக்கு உதவும் ஏட்டுக் கற்றைகள்

  • கற்றலுக்கு உதவும் ஏட்டுக் கற்றைகளை ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல், நூல் எனப் பல பெயரிட்டு அழைத்தனர்.
  • முன்மூன்றும் ஓலைக்கற்றையையும் பின்னிரண்டும் உட்பொருளையும் சிறப்பாகக் குறித்தன.
    • ஓலைக் கற்றைகள் = ஏடு, சுவடி, பொத்தகம்
    • உட்பொருளை குறிப்பவை = பனுவல், நூல்

சமண சமயத்தின் தலையாய அறங்கள்

  • சமண சமையத்தின் தலையாய அறங்கள் நான்கு ஆகும். அவை,
    1. கல்வி
    2. மருந்து
    3. உணவு
    4. அடைக்கலம்

சமண பள்ளிகள்

  • சமணத்தைச் சேர்ந்த திகம்பரத் துறவிகள் மலைக்குகையில் தங்கினர்.
  • அவர்கள் தங்களின் தங்குமிடங்களிலேயே கல்வியையும் சமயக் கருத்துகளையும் மாணவர்களுக்குப் கற்பித்தனர்.
  • ‘பள்ளி’ என்ற சொல்லுக்குப் ‘படுக்கை’ என்று பொருள்.
    • பள்ளி = படுக்கை
  • அவர்களின் படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம், பள்ளிக்கூடம் என அழைக்கப்படலாயிற்று.
  • பள்ளி என்னும் சொல் சமண, பௌத்த சமயங்களின் கொடையாகும்.

கல்வெட்டு சான்றுகள்

  • சமணப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு எடுத்த படுக்கைகள் பற்றிய குறிப்புகள் உள்ள கல்வெட்டுகள்,
    1. திருச்சி மலைக்கோட்டை கல்வெட்டு
    2. சமணக் குன்று எனப்படும் கழுகுமலையில் உள்ள கல்வெட்டு

சமணப் பெண் ஆசிரியர்

  • வந்தவாசி அருகிலுள்ள வேடல் என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.

பட்டினக்குரத்தி

  • பட்டினிக்குரத்தி என்னும் சமணப் பெண் ஆசிரியர் விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியொன்றை நிறுவியிருந்தார்.

பெண் பள்ளிகள்

  • இவை, சமணப் பள்ளிகளில் பெண்களும் ஆசிரியர்களாக இருந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
  • பெண்களுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப் பள்ளிகள் பெண் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.

பட்டிமண்டபம் என்பது?

  • தமிழர்கள் இன்று பரவலாக ஏற்றுக்கொண்டிருக்கும் பட்டிமண்டபம் என்ற கலைவடிவம் சமயத் துறையிலிருந்து தோன்றியது.
  • பட்டிமண்டபம் என்பது சமயக் கருத்துகள் விவாதிக்கும் இடமென்று மணிமேகலையில் சுட்டப்படுகின்றது.
  • பட்டிமண்டபம் பற்றி மணிமேகலை கூறுவதாவது,

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்

சீனப்பயணி யுவான் சுவாங்

  • சீனப்பயணி யுவான் சுவாங் தமிழகத்திற்கு வந்த இடம் = காஞ்சிபுரம்
  • பௌத்தப் பல்கலைக்கழகம் இருந்த இடம் = காஞ்சிபுரம்
  • சீனப்பயணி யுவான் சுவாங் இந்த பௌத்தப் பல்கலைக்கழகத்தில் தங்கி சிறப்புரை ஆற்றியிருக்கிறார் என்ற செய்தி வரலாற்றில் உள்ளது.

மரபுவழிக் கல்வி முறைகள்

  • மரபுவழிக் கல்வி முறைகளாவன,
    1. குருகுலக் கல்விமுறை
    2. திண்ணைப் பள்ளிக் கல்விமுறை
    3. உயர்நிலைக் கல்விமுறை

குருகுலக் கல்விமுறை

  • மாணவர்கள், ஆசிரியருடன் அவரது இல்லத்திலேயே தங்கி கல்வி பயின்றனர்.
  • குருகுலக் கல்வி முறையின் அடிப்படைகளாவன,
    • செய்து கற்றல்
    • வாழ்ந்து கற்றல்
    • எளிமையாக வாழ்தல்
  • இம்முறை போதனை முறையை தாண்டி, வாழ்வியலை கட்டமைப்பதில் சிறப்பானதாக இருந்தது.

திண்ணைப் பள்ளிக் கல்விமுறை

  • 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்த பள்ளிகள் “திண்ணைப் பள்ளிகள்” எனப்பட்டன.
  • திண்ணைப் பள்ளிகளின் வேறு பெயர் = தெற்றிப் பள்ளிகள்
  • கணக்காயர்கள் = திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியர்களை “கணக்காயர்கள்” என்று அழைத்தனர்.

நாட்டுக்கல்வி

      • திண்ணைப் பள்ளிகள், பாடசாலைகள், மக்தாபுகள், மதரஸாக்கள் போன்ற பல்வேறு கல்வி முறைகளை, ஆங்கிலேயர்கள் “நாட்டுக்கல்வி” (Indigenous Education) என்று அழைத்தனர்.
      • இப்பள்ளிகளில் பாடநேரம், பாடத்திட்டம், பித்ரு முறை ஆகியவை அந்தந்த பள்ளி ஆசிரியரின் விருப்பத்திலேயே இருந்தது.

திண்ணைப் பள்ளிகளின் கல்வித்தரம்

      • சென்னை மாகாணத்தில் 12,408 திண்ணைப் பள்ளிகள் இயங்கி வந்தன என்றும் அவற்றின் கல்வித்தரம் பல ஐரோப்பிய நாடுகளின் அப்போதைய கல்வித்தரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகவே காணப்பட்டது என்றும் தாமஸ் மன்றோ காலத்தில் நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரெவரெண்ட் பெல்

      • ‘ரெவரெண்ட் பெல்’ என்ற ஸ்காட்லாந்து பாதிரியார் தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்விமுறையைக் கண்டு வியந்தார்.
      • இம்முறையில் அமைந்த ஒரு பள்ளியை ஸ்காட்லாந்தில் ‘மெட்ராஸ் காலேஜ்’ என்னும் பெயரில் நிறுவினார்.
      • அங்கு இக்கல்விமுறை மெட்ராஸ்சிஸ்டம்,பெல் சிஸ்டம் மற்றும் மானிடரி சிஸ்டம் என்றும் அழைக்கப்பட்டது.

உயர்நிலைக் கல்விமுறை

  • தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் உயர்நிலைக் கல்விமுறை என்ற வகைமைக்குள் இக்கல்விமுறை அடங்கும்.
  • திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்புலவராக விளங்கிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரிடம் தமிழ்த்தாத்தா உ.வே. சாமிநாதர் இம்முறையில்தான் பாடம் பயின்றார்.

கல்வி பெருக காரணம்

  • 1453ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெர்மனி நாட்டவரான ஜான் கூட்டன்பர்க் (Johannes Gutenberg) வடிவமைத்த அச்சு இயந்திரம் கல்வி பெருகக் காரணமாயிற்று.

தமிழகத்தில் முதன் முதலாக கல்விப்பணி

  • கி.பி. (பொ.ஆ.) 1706ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர்களின் சமயப் பரப்புச் சங்கம் தமிழகத்தில் முதன் முதலாகக் கல்விப் பணியில் ஈடுபட்டது.
  • தரங்கம்பாடியில் முதன்முதலில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை அச்சடித்தனர்.
  • இந்தியாவில் முதன் முதலில் அச்சேறிய மொழி தமிழே ஆகும்.
  • டச்சுக்காரர்கள் அறப்பள்ளிகளை (Missionary Schools) நிறுவியதோடு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் அமைத்தனர்.

இந்தியர்கள் கல்விக்காக நிதி

  • 1813 ஆம் ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாராளுமன்றம், இந்தியர்களின் கல்விக்காக ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் ஒதுக்கியது.

கீழைத்தேசியவாதிகள்

  • அக்காலத்தில் இந்தியாவில் தாய்நாட்டு இலக்கியங்களையும் கீழைத்தேசத்துக் கலைகளையும் பயிற்றுவிக்க வேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்கள் கீழைத்தேயவாதிகள் (Orientalists) என்று அழைக்கப்பட்டனர்.

மேற்கத்தியவாதிகள்

  • மேற்கத்தியக் கல்விமுறையான ஆங்கிலவழிக் கல்விமுறை மூலமாகவே இந்தியர்களை முன்னேற்ற முடியும் என்று ஒரு சாரார் வாதிட்டனர். இவர்கள் மேற்கத்தியவாதிகள் (Anglicists) என்று அழைக்கப்பட்டனர்.

மெக்காலே கல்விக்குழு

  • கீழைத்தேயவாதிகள் மற்றும் மேற்கத்தியவாதிகள் ஆகியோர் இடையே உள்ள வேறுபாடுகளை நீக்க “மெக்காலே கல்விக்குழு” அமைக்கப்பட்டது.
  • மெக்காலே கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு = 1835

இந்திய கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்

  • இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் எனப்படுவது = சர் சார்லஸ் வுட் அறிக்கை ஆகும்
  • சார்லஸ் வுட் அறிக்கை சமர்பிக்கப்பட்ட காலம் = 1854
  • தற்கால கல்வி, தேர்வு முறையும் அமைய காரணமாக இருந்தது = சர் சார்லஸ் வுட் அறிக்கை

ஹன்டர் கல்விக்குழு

  • ஹன்டர் கல்விக்குழுவின் காலம் = 1882
  • பள்ளிகளில் சீருடை முறை, தாய்மொழி வழிக்கல்வி போன்றவற்றை கட்டாயமாக்கிய குழு = ஹன்டர் கல்விக்குழு
  • புதிய பள்ளிகளை தனியாரும் துவங்கி நடத்தலாம் என பரிந்துரை செய்த குழு = ஹன்டர் கல்விக்குழு

தமிழகத்தில் விடுதலைக்கு முன் கல்வி வளர்ச்சி

11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு
11TH TAMIL தமிழகக் கல்வி வரலாறு

ஆண்டு

நிகழ்வு
1826

சென்னை ஆளுநர் சர். தாமஸ் மன்றோ ஆணைக்கிணங்கப் பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.

1835

சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இரண்டு மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்று.
1854

பொதுக்கல்வித் துறை நிறுவப்பட்டு முதல் பொதுக்கல்வி இயக்குநர் (DPI) நியமிக்கப்பட்டார்.

1857

சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1859

1794 இல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே என்ற நிறுவனம், 1859 இல் கிண்டி பொறியியல் கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது.

1910

தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.
1911

பள்ளியிறுதி வகுப்பு – மாநில அளவிலான பொதுத்தேர்வில் நடைமுறைக்கு வந்தது.

அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி

  • ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் படிக்கத் தெரிந்தவர்கள் எண்ணிக்கை = 15% ஆகும்.
  • நாடு விடுதலைக்கு பின், இந்திய அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 45 இன் கீழ் நாட்டிலுள்ள 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.

ஹென்றி ஆடம்ஸ் கருத்து

  • ஹென்றி ஆடம்ஸ் = ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால், ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது.

 

 

Leave a Reply