8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

  • கண்ணுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியளித்து நற்பண்புகளை வளர்ப்பது கலைகளின் இயல்பாகும்.
  • மேலும் அவை தொன்மையான பண்பாட்டுக்கூறுகளையும் எடுத்துக்காட்டுகின்றன

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கைவினைக்கலை என்றால் என்ன

  • அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம்.
8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

மண்பாண்டக்கலை

  • உலகில் மிகவும் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று மண்பாண்டக்கலை.
  • சிந்துசமவெளி” அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன.
  • தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
  • நாகை மாவட்டம் “செம்பியன் கண்டியூரில்” கலையழகு மிகுந்த மண்கலங்கள் கிடைத்துள்ளன.
  • மதுரை அருகே கீழடியில் ஏராளமான “சுடுமண் பொருட்கள்” கிடைத்துள்ளன.

திருவை என்றால் என்ன

  • மண்பாண்டம் செய்ய பயன்படும் சக்கரத்தை “திருவை” என்பர்.
  • களிமண்ணுடன் மெல்லிய மணல் மற்றும் சாம்பல் ஆகியவற்றை சேர்த்து பக்குவப்படுத்தி, மண்பாண்டங்களை செய்வர்.
8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

பானை வனைதல்

  • பானை செய்தலைப் “பானை வனைதல்” எனவும் கூறுவர்.
  • முடிவு பெற்ற பானையை மெருகேற்ற “உருட்டுக்கல்” கொண்டு தேய்ப்பர்.

டெரகோட்டா சுடுமண் சிற்பங்கள்

  • மண்பாண்டக் கலையில் அடுத்த வளர்ச்சி நிலை = சுடுமண் சிற்பங்கள்.
  • சுடுமண் சிற்பங்களை ஆங்கிலத்தில் டெரகோட்டா என்பர்.
  • களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் சுட்டு எடுக்கப்படுபவை சுடுமண் சிற்பங்கள் ஆகும்.
8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
8TH TAMIL நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

மூங்கில்கலை

  • மூங்கிலால் பல வகை பொருட்கள் செய்யப்படுகின்றன.
  • பிறந்த குழந்தைக்கு விளையாட்டு பொருட்கள் முதல் இறந்தவரை எடுத்துச் செல்லும் பாடை வரை மூங்கிலால் செய்யப்படுகின்றன.

மூவகை மூங்கில்கள்

  • மூங்கில்கள் மூன்று வகைப்படும். அவை,
    • கல்மூங்கில்
    • மலைமூங்கில்
    • கூட்டுமூங்கில்
  • கைவினைப் பொருட்கள் செய்வதற்கு ஏற்ற மூங்கில்கள் = கூட்டுமூங்கில்கள்.

கூம்பொடு மீப்பாய் களையாது

  • முற்காலத்தில் பாய்மரப்படகுகளில் பைகளை பயன்படுத்தினர் என்பதனை “கூம்பொடு மீப்பாய் களையாது” என்ற புறநானூற்று பாடல் அடி விளக்குகிறது.
  • “கூம்பொடு மீப்பாய் களையாது” என்ற அடி இடம் பெற்ற நூல் = புறநானூறு.

பனையோலை

  • பழந்தமிழ் இலக்கியங்கள் பாதுகாத்து வைத்தவை = பனையோலை.
  • பனை மரம் = தமிழ்நாட்டின் மாநில மரம்.

பிரம்பு

  • பிரம்பு என்பது கொடி வகையை சார்ந்த தாவரம் ஆகும்.
  • பிரம்பின் தாவரவியல் பெயர் = கலாமஸ் ரொடாங் (Calamus Rotang)
  • இது நீர்நிறைந்த வாய்க்கால் வரப்புகளிலும், மண்குகைகளிலும் வளருபவை.
  • இது தமிழகத்தில் தற்போது குறைந்துவிட்டது.

 

 

 

Leave a Reply