TNPSC INDIAN POLITY – Making Of The Constitution

TNPSC INDIAN POLITY – Making Of The Constitution

இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கம்

tnpsc indian polity

அரசியல் சட்டம்:

  • ஒரு நாட்டு மக்கள் ஆளப்படுவதற்கான அரசியல் அமைப்புக்கு அடிப்படையாக இருப்பதே அரசியல் சட்டம் ஆகும்
  • ஆட்சியமைப்பின் மிக முக்கிய கூறுகளான சட்டமியற்றுதல், நிர்வாகம், நீதி – ஒழுங்கு போன்றவற்றைப் பற்றி எடுத்துரைப்பதும்; அவற்றின் அதிகாரங்களை விவரிப்பதும்; அவற்றின் பொறுப்பை நடைமுறைப்படுத்துவதும்; அவற்றிற்கிடையேயான பரஸ்பர தொடர்பையும், மக்களுடனான தொடர்பையும் கட்டுப்படுத்துவது அரசியல் சட்டமாகும்.
  • 1934ல் இந்தியாவிற்கென்று தனி அரசியல் அமைப்பு சட்டம் வேண்டுமென்று முதன் முதலில் கூறியவர் எம்.என்.ராய் ஆவார்.
  • திரு எம்.என்.ராய் அவர்கள் 1927ல், “இந்தியன் பேட்ரியாட்” (INDIAN PATRIOT) என்ற இதழில் முதலில் இந்திய அரசியல் நிர்ணய சபை பற்றி கூறியுள்ளார்
  • 1936ம் ஆண்டு பைசாபூர் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது (மாநாட்டு தலைவர்= நேரு)
  • இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆங்கில அரசு 1940ம் ஆண்டு “ஆகஸ்ட் நன்கொடை”யில் ஏற்றுக்கொண்டது
  • 1946ம் ஆண்டு கேபினெட் மிஷன் திட்டத்தில் வழங்கப்பட்ட ஒப்புதலை அடுத்து 1946 நவம்பர் மாதம் இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது

அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு:

TNPSC INDIAN POLITY

  • அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 ஆகும்
  • இதில் 296 இடங்கள் பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் , 93 இடங்கள் சுதந்திர அரசகளுக்கும் ஒதுக்கப்பட்டன
  • மாகாணங்கள் மற்றும் இந்திய மாநில மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் (சுமார் 10 இலட்சம் பேருக்கு ஒரு உறுப்பினர்) உறுப்பினர் இடங்கள், அந்தந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமையுமாறு இருந்தது
  • பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த 296 இடங்களுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
  • சுதந்திர அரசுகளின் தலைவர்கள் உறுப்பினர்களை நியமித்தனர்
  • எனவே அரசியல் நிர்ணயசபை, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க்கப்பட்ட உறுப்பினர்களும், நேரடியாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்ட அவையாக அமைந்தது
  • பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள 296 இடங்களுக்கான தேர்தல் 1946ம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற்றது
  • இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் 208 இடங்களையும், முஸ்லிம் லீக் 73 இடங்களையும், தனிப்பட்ட உறுப்பினர்கள் 15 பேர்களும் வெற்றி பெற்றனர்

அரசியல் நிர்ணயசபையின் தொடக்கம்:

  • அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி கூடியது
  • இக்கூட்டத்தை முஸ்லிம் லீக் புறக்கணித்தது
  • முதல் கூட்டத்தில் கலந்துக் கொண்ட மொத்த உறுப்பினர்கள் = 211
  • அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்திற்கு தற்காலிக தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டார் (குறிப்பு: இம்முறை பிரெஞ்சு நாட்டில் பின்பற்றப்படும் முறையாகும்)
  • 1946ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அரசியல் நிர்ணயசபை கூடியது
  • அரசியல் நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டர்
  • அரசியல் நிர்ணய சபையின் துணைத் தலைவராக எச்.சி.முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டர்
  • அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராக சர்.பி.என்.ராவ் நியமிக்கப்பட்டார்

குறிக்கோள் தீர்மானம்:

  • 1946ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க “குறிக்கோள் தீர்மானத்தை” நேரு முன்மொழிந்தார்
  • இத் தீர்மானம், அரசியல் நிர்ணய சபையால் 1947ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
  • இக்குறிக்கோள் தீர்மானத்தின் மாறுபட்ட வடிவமே தற்போதைய அரசியல் அமைப்பின் “முகப்புரை” ஆகும்

சுதந்திரத்திற்கு பிறகு:

  • அரசியல் நிர்ணய சபை மத்திய சட்ட சபையாகவும் செயல்பட்டது. அதாவது, அரசியல் நிர்ணய சட்டம் உருவாக்க சபை கூடும் மற்றும் நாட்டிற்கு தேவையான் அடிப்படை சட்டங்களை உருவாகவும் அவை கூடும்
  • இவ்விரு தனிதனி செயல்களுக்கும் தனித்தனி நாட்களில் அவை கூடும்.
  • அரசியல் நிர்ணய சபைக்கு அவை கூடும் போது, அவையை டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை ஏற்று நடத்துவார்
  • சட்டமன்றமாக அவை கூடும் போது, ஜி.வி.மவ்லான்கர் தலைமை ஏற்று நடத்துவார் (குறிப்பு: இந்தியாவின் முதல் சபாநாயகர் = கணேஷ் வாசுதேவ மவ்லான்கர்)
  • 1946 காபினட் மிஷன் திட்டம் மூலம் ஏற்படுத்தப்பட்ட 389 இடங்கள், இறுதியாக குறைந்து 299 ஆக ஆனது.

பிற பணிகள்:

  • 1949ம் ஆண்டு மே மாதம், இந்தியா காமன்வெல்த் அமைப்பின் உறுப்பினர் ஆவதற்கு அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் அளித்தது
  • அரசியல் நிர்ணய சபையால் தேசிய கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜூலை 22, 1947
  • அரசியல் நிர்ணய சபையால் தேசிய கீதம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
  • அரசியல் நிர்ணய சபையால் தேசிய பாடல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
  • இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் = ஜனவரி 24, 1950
  • அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்ட தினம் = ஜனவரி 24, 1950
  • அரசியல் நிர்ணய சபையின் கூட்டுக் கூட்டம் மொத்தம் 11 முறை நடந்தது
  • இதற்காக எடுத்துக்கொண்ட நாட்கள் 2 வருடம், 11 மாதம் மற்றும் 18 நாட்கள்
  • அரசியல் அமைப்பு சட்டத்தின் வரைவு அறிக்கை உருவாக்க எடுத்துக்கொள்ளப்பட்ட நாட்கள் = 114
  • அரசியல் நிர்ணய சபைக்கு செலவான மொத்த தொகை = 64 இலட்சம்
  • 64 இலட்சம் ரூபாய் செலவில் 60 நாடுகளின் அரசியலமைப்புகளை ஆய்வு செய்து இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது

அரசியல் நிர்ணய சபை குழுக்கள்:

  • அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன
  • மொத்தம் அமைக்கப்பட்ட குழுக்கள் = 22
  • அவற்றில் முக்கியமானது = 8 குழுக்கள்
  • குழுக்களும் அவற்றின் தலைவர்களும்,
    • ஒன்றிய அதிகார குழு = ஜவஹர்லால் நேரு
    • ஒன்றிய அரசியலைம்பு சட்ட குழு = ஜவஹர்லால் நேரு
    • மாகாண அரசியலைம்பு சட்ட குழு = வல்லபாய் படேல்
    • வரைவு குழு = டாக்டர் அம்பேத்கர்
    • செயல்முறை விதிகள் குழு = டாக்டர் ராஜேந்திர பிரசாத்
    • மாநிலங்கள் குழு = ஜவஹர்லால் நேரு
    • வழிகாட்டு குழு = டாக்டர் ராஜேந்திர பிரசாத்
    • அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள் போன்றவைகான அறிவுரை குழு = சர்தார் வல்லபாய் படேல். இக்குழு 4 துணைக்குழுக்களை உள்ளடக்கியது. அவை
    • அடிப்படை உரிமைகள் துணைக்குழு = ஜே.பி.கிருபாளினி
    • சிறுபான்மையினர் துணைக்குழு = எச்.சி.முகர்ஜி
    • வடகிழக்கு எல்லை மலைவாழ் மக்களுக்கான துணைக்குழு = கோபிநாத் பர்தோலி
    • அஸ்ஸாம் மாநிலம் தவிர பிற மலைவாழ் பகுதிகளுக்கான துணைக்குழு = ஏ.வி.தக்கார்

சிறு குழுக்கள்:

  • அரசியல்நிர்ணய சபை பணிகள் குழு = ஜி.வி.மவ்லான்கர்
  • நிதி மற்றும் பணியாளர் குழு = டாக்டர் ராஜேந்திர பிரசாத்
  • வரைவு அரசியலமைப்பை ஆராயும் சிறப்பு குழு = அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர்
  • தேசிய கொடிக்கான தற்காலிக குழு = டாக்டர் ராஜேந்திர பிராசாத்
  • அறிமுக ஆவணக் குழு = அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர்
  • உச்ச நீதிமன்ற தற்காலிக குழு = எஸ். வரதாசாரியார்

வரைவு குழு:

  • அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட குழுக்களில் மிக முக்கியமான குழு, வரைவு குழு ஆகும்
  • வரைவு குழு அமைக்கப்பட்ட தினம் = 1947, ஆகஸ்ட்29
  • இக்குழு 7 உறுப்பினர்களை உள்ளடக்கியது. அவர்கள்,
    • ஆக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தலைவர்)
    • என் கோபாலசுவாமி ஐயங்கார்
    • அல்லாடி கிருஷ்ணஸ்வாமி ஐயர்
    • டாக்டர் கே.எம்.முன்ஷி
    • சையத் மொஹம்மத் சாதுல்லா
    • பி.எல்.மிட்டர், இவரின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து இவ்விடத்திற்கு “என். மாதவ ராவ்” நியமிக்கப்பட்டார்
    • டி.பி.கைத்தான், இவர் 1948ல் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இவ்விடத்திற்கு“டி.டி.கிருஷ்ணமாச்சாரி” நியமிக்கப்பட்டார்
  • அரசியல் நிர்ணய சபையின் முதல் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது = 1948 பிப்ரவரி
  • அரசியல் நிர்ணய சபையின் இரண்டாவது வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது = 1948 அக்டோபர்
  • வரைவு குழு கூடிய மொத்த நாட்கள் = 141 நாட்கள்

பிரேம் பெஹாரி நரைன் ரைசாத்:

TNPSC INDIAN POLITY

  • இந்திய அரசியல் சட்டம் கைகளால் எழுதப்பட்ட ஒரு ஆவணமாகும்
  • இதை எழுதியவர் பிரேம் பெஹாரி நரைன் ரைசாத் ஆவார்
  • இதை எழுத அவருக்கு ஆறு மாதங்கள் பிடித்தது

அரசியல் அமைப்பு ஆரம்பம்:

  • 1948, நவம்பர் 4ம் தேதி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வரைவு குழுவின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார்
  • இவ்வறிக்கை மீது பொது விவாதம் ஐந்து நாட்கள் நடைபெற்றது (நவம்பர் 9 வரை)
  • வரைவு அறிக்கை மீதான இரண்டாவது விவாதம் நவம்பர்15, 1948 முதல்அக்டோபர் 17, 1949 வரை நடைபெற்றது
  • அதில் 7653 திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, முடிவில் 2473 திருத்தங்கள் மீது மட்டுமே விவாதம் நடந்தது
  • வரைவு அறிக்கை மீதான மூன்றாவாது விவாதம் 1949, நவம்பர் 14ம் தேதி தொடங்கியது
  • வரைவு அரசியல் அமைப்பு சட்டம் 1949, நவம்பர் 26ம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, உறுப்பினர்களிடமும் தலைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டது
  • மொத்தமுள்ள 299 உறுப்பினர்களில் 284 உறுபினர்கள் அன்று கையெழுத்து இட்டனர்
  • அத்தினமே அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமாக அரசியலமைப்பின் முகப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • குடியுரிமை, தேர்தல், தற்காலிக பாராளுமன்றம் ஆகிய விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன (1949, நவம்பர் 26)
  • ஏனைய விதிகள் 1950, ஜனவரி 26ம் தேதி முதல் அமலில் வந்தன.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்:

TNPSC INDIAN POLITY

  • டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், வரைவு குழுவின் தலைவர் ஆவார்
  • இவர்,
    • இந்திய அரசியலமைப்பின் தந்தை
    • இந்திய அரசியலமைப்பின் சிற்பி
    • நவீன மனு

என்றெல்லாம் போற்றபடுகிறார்

ஜனவரி 26, 1950:

  • இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினம் = ஜனவரி 26, 1950 ஆகும்
  • இத்தினமே, “அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த தினம்” மற்றும் “இந்திய குடியரசு தினம்” ஆகும்.

TNPSC INDIAN POLITY

  • ஜனவரி 26, தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுக்கிய காரணம், “1929, டிசம்பரில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் லாகூர் மாநாட்டில், 1930 ஜனவரி 26ம் தேதி பூரண சுயராஜ்ஜிய தினமாக கொண்டாடப்படும்” என அறிவிக்கப்பட்டது.

இந்திய அரசியல் நிர்ணய சபையை பற்றிய விமர்சனம்:

  • இந்திய அரசியல் நிர்ணய சபை “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுபினர்களை கொண்ட சபை அல்ல” என குற்றம் சாட்டினர்
  • கிரான்வில் ஆஸ்டின் = “அரசியல் நிர்ணய சபையானது ஒருகட்சி அவையாகவும், ஒருகட்சி நாடாகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சியே அவை, காங்கிரசே இந்தியா ஆகும்” என்றார் (The Constituent Assembly was a one-party body in an essentially one-party country. The Assembly was the Congress and the Congress was India”
  • “இந்திய அரசியல் நிர்ணய சபையானது வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகளை மட்டுமே உள்ளடக்கியது” என்று கூறப்பட்டது
  • விஸ்கன்ட் சைமன் பிரபு = “ஒரு இந்து மத அவை ஆகும்” (A body of Hindus)
  • வின்ஸ்டன் சர்ச்சில் = “அரசியல் நிர்ணய சபை, இந்தியாவின் பெரும்பான்மை சமூகத்தையே காட்டுகிறது” (Only one major community in India)

11 கூட்டங்கள்:

  • முதல் கூட்டம்  =      9 –23, டிசம்பர் 1946
  • இரண்டாவது கூட்டம் =      20–25, ஜனவரி 1947
  • மூன்றாவது கூடம் =      28 ஏப்ரல் –2 மே, 1947
  • நான்காவது கூட்டம் =      14–31 ஜூலை,1947
  • ஐந்தாவது கூட்டம் =      14–30 ஆகஸ்ட்,1947
  • ஆறாவது கூட்டம் =      27 ஜனவரி 1948
  • ஏழாவது கூட்டம் =      4 நவம்பர்,1948–8 ஜனவரி,1949
  • எட்டாவது கூட்டம் =      16 மே –16 ஜூன், 1949
  • ஒன்பதாவது கூட்டம் =      30 ஜூலை –18 செப்டம்பர், 1949
  • பத்தாவது கூட்டம் =      6–17 அக்டோபர்,1949
  • பதினொன்றாவது கூட்டம் =      14–26 நவம்பர்,1949
  • இறுதியாக ஜனவரி 24,1950 அன்று கூடியது

 

 

 

தேதிகள் & வருடங்கள்:

 

பூரண சுயராஜ்யம் கொண்டாடப்பட்ட தினம் ஜனவரி 26, 1930
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூடம் தொடங்கிய நாள் டிசம்பர் 9, 1946
அரசியல் நிர்ணயசபை தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் டிசம்பர் 11, 1946
நேருவால் குறிக்கோள் தீர்மானம் முன்மொழிந்த தினம் டிசம்பர்13, 1946
குறிக்கோள் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் ஜனவரி 22, 1947
இந்திய காமன்வெல்த் உறுப்பினர் ஆவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது மே 1949
தேசிய கோடி அங்கீகரிக்கப்பட்ட தினம் ஜூலை 22, 1947
வரைவு குழு அமைக்கப்பட்ட தினம் ஆகஸ்ட் 29, 1947
முதல் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது பிப்ரவரி 1948
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் நவம்பர் 26, 1949
தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்ட தினம் ஜனவரி 24, 1950
தேசிய பாடல் அங்கீகரிக்கப்பட்ட தினம் ஜனவரி 24, 1950
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினம் ஜனவரி 24, 1950
அரசியல் நிர்ணய சபையின் இறுதி கூட்ட தினம் ஜனவரி 24, 1950
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினம் ஜனவரி 26, 1950

Leave a Reply