12 ஆம் வகுப்பு காப்பியங்கள்

12 ஆம் வகுப்பு காப்பியங்கள்

12 ஆம் வகுப்பு காப்பியங்கள்
12 ஆம் வகுப்பு காப்பியங்கள்

12 ஆம் வகுப்பு காப்பியங்கள்

  • தமிழில் காப்பியங்களுக்கு இலக்கணம் வகுத்துள்ள நூல் = கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரம் ஆகும்.
  • தண்டியலங்காரத்தில் “பெருங்காப்பிய நிலை பேசுங்காலை” எனத் தொடங்கும் நூற்பா காப்பியங்களின் இலக்கணம் கூறுகிறது.

பெருங்காப்பிய இலக்கணம்

  • இயற்கையை வாழ்த்துதல், தெய்வத்தினை வணங்குதல், உரைக்கும் பொருள் உணர்த்தல் ஆகிய மூன்றினுள் ஒன்று பெருங்காப்பியத்தில் முதலாக வர வேண்டும்.
  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களை பெருங்காப்பியம் வலியுறுத்தி பாட வேண்டும்.
  • பெருங்காப்பியங்கள், எதையும் குறைவின்றிச் செய்து முடிக்கும் வலிமை வாய்ந்த தன்னிகர் இல்லா தலைவனை பெற்றிருக்க வேண்டும்.
  • காப்பியம் எழுந்த சூழல் சார்ந்து மலை, கடல், நாடு, நகர் முதலானவற்றின் வருணனைகள் இடம்பெற வேண்டும்.
  • பின்னர் அந்தந்த நிலத்து மக்களின் வாழ்வியல், சடங்குகள், விளையாட்டுகள், தூது, பயணம், போர், வெற்றி போன்ற செய்திகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • எண்வகை மெய்ப்பாடுகளைக் கூறும் வகையில் இதன் உள்ளடக்கம் அமைதல் வேண்டும். (எண் வகை மெய்ப்பாடுகள் = சிரிப்பு, அழுகை, சிறுமை, வியப்பு, அச்சம், பெருமை, சினம், மகிழ்ச்சி)
  • காப்பியத்தின் பெரும்பிரிவிற்குக் காண்டம், இலம்பகம், பருவம் எனவும் உட்பிரிவிற்குச் சருக்கம், காதை, படலம் எனவும் பெயரிடுவர்.

சிறுங்காப்பிய இலக்கணம்

  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பொருள்களில் ஏதேனும் ஒன்று குறைந்து வர பாடல் அமைப்பது சிறு காப்பியம் ஆகும் என்கிறார் தண்டியலங்கார நூலின் ஆசிரியர் தண்டி.

ஐம்பெரும்காப்பியங்கள்

ஐஞ்சிறுகாப்பியங்கள்

  • அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்றோ சிலவோ குறைந்து, பெருங்காப்பிய இலக்கணத்திற்கு மாறுபட்டு வருவது சிறுங்காப்பியமாகும்.
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமண சமய காப்பியங்களாகும்.
  • ஐஞ்சிறுகாப்பியங்கள் = உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி.

 

 

 

 

 

Leave a Reply