6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு

6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு

6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு

6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு

  • பாடல்கள் மனத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருபவை.
  • பாடலைப் பாடினாலும் மகிழ்ச்சி; கேட்டாலும் மகிழ்ச்சி.
  • ஏட்டில் எழுதப்படாத இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன.
  • தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன.
  • இந்நாட்டுப்புறப் பாடல்களே தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • நந்தவனம் = பூஞ்சோலை
  • பார் = உலகம்
  • பண் = இசை
  • இழைத்து = பதித்து

தொகைச்சொற்களின் விளக்கம்

  • முத்தேன் = கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
  • முக்கனி = மா, பலா, வாழை
  • முத்தமிழ் = இயல், இசை, நாடகம்
6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு
6TH TAMIL கண்மணியே கண்ணுறங்கு

வாய்மொழி இலக்கியங்கள்

  • தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
  • தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.
  • நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால்+ஆட்டு) என்று பெயர்பெற்றது.
  • குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு.

 

 

Leave a Reply