6TH TAMIL இன்பத்தமிழ்

6TH TAMIL இன்பத்தமிழ்

6TH TAMIL இன்பத்தமிழ்

6TH TAMIL இன்பத்தமிழ்

  • நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன
  • தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது.
  • பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறார்.
  • கண்ணே! மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

பாரதிதாசன் பாடல்

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

–    பாரதிதாசன்

அருஞ்சொற்பொருள்

  • நிருமித்த = உருவாக்கிய
  • சமூகம் = மக்கள் குழு
  • விளைவு = வளர்ச்சி
  • அசதி = சோர்வு

பாடல் பொருள்

  • பாரதிதாசன் தமிழுக்கு என்னென்ன பெயர் வைத்து அழைக்கிறார் = அமுது, நிலவு, மணம்.
  • தமிழை எங்கள் உயிருக்கு இணையானது என்கிறார் பாரதிதாசன்.
  • தங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீரை போன்றது தமிழ் என்கிறார் பாரதிதாசன்.
  • எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ஊர் தமிழ் மொழி என்கிறார் பாரதிதாசன்.
  • “இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்” என்று பாடியவர் = பாரதிதாசன்.
  • விளைவுக்கு = நீர்
  • அறிவுக்கு = தோள்
  • இளமைக்கு = பால்
  • புலவர்க்கு = வேல்

பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு

6TH TAMIL இன்பத்தமிழ்
6TH TAMIL இன்பத்தமிழ்
  • பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
  • பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
  • தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார்.
  • எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
  • இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
  • இப்பாடல், ‘பாரதிதாசன் கவிதைகள்’ என்ற நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.

 

 

 

 

 

 

Leave a Reply