6TH TAMIL மூதுரை

6TH TAMIL மூதுரை

6TH TAMIL மூதுரை

6TH TAMIL மூதுரை

  • கல்விக்கு எல்லை இல்லை.
  • மனிதன் பிறந்தது முதல் இறுதிவரை கற்றுக்கொண்டே இருக்கிறான்
  • கல்வி மனிதனை உயர்த்துகிறது.
  • கல்வியும் செல்வமாகக் கருதத் தக்கது.
  • அது பிறருக்குத் தந்தாலும் குறையாமல் வளரும்.
  • கல்வியைப் பிறரால் கைப்பற்றவோ அழிக்கவோ முடியாது.
  • அழியாச் செல்வமாகிய கல்வியைக் கற்றவன் எங்கும் எப்போதும் சிறப்புப் பெறுவான்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

மூதுரை பாடல்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

              – ஔவையார்

அருஞ்சொற்பொருள்

  • மாசற = குற்றம் இல்லாமல்
  • சீர்தூக்கின் = ஒப்பிட்டு ஆராய்ந்தால்
  • தேசம் = நாடு
  • மன்னற்கு = மன்னனுக்கு

மூதுரை பாடலின் பொருள்

  • மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர்.
  • மன்னனுக்குத் தன் நாட்டில் மட்டுமே சிறப்பு.
  • கல்வி கற்றவர்க்குச் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பு.
6TH TAMIL மூதுரை
6TH TAMIL மூதுரை

ஔவையார் ஆசிரியர் குறிப்பு

  • இந்நூலின் ஆசிரியர் ஒளவையார்.
  • இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.
  • மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
  • சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது.
  • மூதுரை நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
  • “கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = ஔவையாரின் மூதுரை.

 

 

 

 

Leave a Reply