6TH TAMIL கனவு பலித்தது

6TH TAMIL கனவு பலித்தது

6TH TAMIL கனவு பலித்தது

6TH TAMIL கனவு பலித்தது

  • தமிழில் இயல் உண்டு; இசை உண்டு; நாடகம் உண்டு.
  • தமிழில் அறிவியலும் உண்டு.
  • தமிழுக்கு அறிவியல் புதிதல்ல
  • அன்று முதல் இன்று வரை அறிவியல் செய்திகளை இலக்கியங்கள் வாயிலாக வெளியிட்டிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

6TH TAMIL கனவு பலித்தது
6TH TAMIL கனவு பலித்தது
  • நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என்கிறார் = தொல்காப்பியர்.
  • உலக உயிர்களை “ஓரறிவு முதல் ஆறறிவு வரை” வகைப்படுத்தியவர் = தொல்காப்பியர்.
  • “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்று கூறியவர் = தொல்காப்பியர்.
  • “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = தொல்காப்பியம்.

கடல்நீர் ஆவியாகி மழை பெய்தல் பற்றி சங்க இலக்கியங்கள் கூறுதல்

6TH TAMIL கனவு பலித்தது
6TH TAMIL கனவு பலித்தது
  • கடல் நீர் ஆவியாகி மேகமாகும்.
  • பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும்.
  • பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கடல்நீர் ஆவியாகி மழை பெய்தல் பற்றி கூறும் நூல்கள் = முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை.
  • “கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி….” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் = கார் நாற்பது.

திரவப் பொருள்களின் அழுத்தம் பற்றி கூறிய ஔவையார்

  • திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தை கூறிய சங்கக்காலப் புலவர் = ஔவையார்.
  • “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால் நாழி” என்று கூறியவர் = ஔவையார்.

பதிற்றுப்பத்தில் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி

6TH TAMIL கனவு பலித்தது
6TH TAMIL கனவு பலித்தது
  • வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நூல் = பதிற்றுப்பத்து.
  • “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = பதிற்றுப்பத்து.

நற்றிணையில் புண்ணை நரம்பினால் தைத்த செய்தி

6TH TAMIL கனவு பலித்தது
6TH TAMIL கனவு பலித்தது
  • சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் = நற்றிணை.
  • “கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நற்றிணை.

கபிலரின் கூற்றோடு ஒத்துப்போன கலிலியோ கருத்து

6TH TAMIL கனவு பலித்தது
6TH TAMIL கனவு பலித்தது
  • தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும்.
  • அறிவியல் அறிஞர் கலீலியோ நிறுவிய கருத்து இது.
  • இக்கருத்து திருவள்ளுவமாலை என்னும் நூலில் கபிலர் எழுதிய பாடலில் இடம்பெற்றுள்ளது.
  • “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருவள்ளுவமாலை.
  • “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற அடிகளை பாடியவர் = கபிலர்.

தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்

  • மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல்கலாம்
  • இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
  • இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.

 

 

 

 

Leave a Reply