7TH TAMIL விலங்குகள் உலகம்

7TH TAMIL விலங்குகள் உலகம்

7TH TAMIL விலங்குகள் உலகம்

7TH TAMIL விலங்குகள் உலகம்

  • வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும்.
  • இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகும்
  • காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிரிகள் உதவுகின்றன.
  • மனிதனின் முதல் இருப்பிடம் காடுதான். அதன் மரபுத் தொடர்ச்சியாகத்தான் காட்டைப்பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும் அறியும் ஆர்வம் மனிதர்களிடம் இன்றும் தொடர்கிறது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

முண்டந்துறை புலிகள் காப்பகம்

  • தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய புலிகள் காப்பகம் = முண்டந்துறை புலிகள் காப்பகம்.
  • முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு = 895 சதுர கிலோ மீட்டர்.

காடு என்பது யாது

  • மனித முயற்சி இன்றி வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள், புல், புதர்கள், பூச்சியினங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் காடு ஆகும்.

யானைகள்

7TH TAMIL விலங்குகள் உலகம்
7TH TAMIL விலங்குகள் உலகம்
  • உலகின் எத்தனைவ் அகியான யானைகள் உள்ளன = இரண்டு வகை. அவை,
    • ஆசிய யானைகள்
    • ஆப்ரிக்க யானைகள்
  • ஆசிய யானைகளில் ஆண் யானைக்கு மட்டுமே தந்தம் உண்டு. பெண் யானைகளுக்கு தந்தம் இல்லை.
  • ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது = தந்தங்கள்.
  • ஆப்ரிக்க யானைகளில் இரண்டுக்குமே தந்தம் உண்டு.
  • யானைகள் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை.
  • யானைகள் கூட்டத்தை ஒரு பெண் யானை தான் தலைமை தாங்கும்.
  • உணவு, குடிநீருக்காக இடம்பெயர்ந்து கொண்டு இருக்கும் யானைகள்.
  • யானை ஒரு நாள் உட்கொள்ளும் உணவு = 250 கிலோ புல், இலை, தழை.
  • யானைக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் குடிநீர் = 65 லிட்டர்.
  • மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு = யானை.

கரடிகள்

7TH TAMIL விலங்குகள் உலகம்
7TH TAMIL விலங்குகள் உலகம்
  • கரடி ஒரு அனைத்துண்ணி விலங்காகும்.
  • கரடிக்கு மிகவும் பிடித்த உணவு = கறையான்.
  • நன்கு வளர்ந்த கரடியின் எடை = 160 கிலோ வரை இருக்கும்.
  • கரடிகளை தேனீக்களிடமிருந்து காப்பது அதன் = முடி (உரோமம்)

புலிகள்

7TH TAMIL விலங்குகள் உலகம்
7TH TAMIL விலங்குகள் உலகம்
  • புலிகள் தனித்து வாழும் இயல்பை உடைய விலங்குகள்.
  • ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும்.
  • மற்ற புலிகள் அதன் எல்லைக்குள் செல்லாது.
  • கருவுற்ற புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈனும்.
  • குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்க்கும்.
  • குட்டிகள் வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளை பிரித்து தனியாக அனுப்பிவிடும்.
  • ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு என அழைக்கப்படும் விலங்கு = புலிகள்.
  • புலிகளை கொண்டே காட்டின் வளம் கணக்கிடப்படுகிறது.
  • “பண்புள்ள விலங்கு” என கூறப்படும் விலங்கு = புலிகள்.

சிங்கங்கள்

  • உலகில் இரண்டு வகை சிங்கங்கள் உள்ளன. அவை,
    • ஆசிய சிங்கங்கள்
    • ஆபிரிக்கச் சிங்கங்கள்
  • இந்தியாவில் குஜராத்தில் உள்ள “கிர்” சரணாலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் உள்ளன.
  • நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகியவற்றில் சிங்கங்களை விட புலிகளே சிறந்தது.
  • இயற்கை விஞ்ஞானிகள் புலியையே “காட்டுக்கு அரசன்” என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வனக்கல்லூரி

  • தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் = கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்.
  • கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “இளநிலை வனவியல்” மற்றும் “முதுநிலை வனவியல்” ஆகிய படிப்புகள் உள்ளன.

 

7TH TAMIL

 

 

Leave a Reply