7TH TAMIL இந்திய வனமகன்

7TH TAMIL இந்திய வனமகன்

7TH TAMIL இந்திய வனமகன்

7TH TAMIL இந்திய வனமகன்

  • மனித முயற்சியின்றி உருவாகிய வானளாவிய மரங்களும் அடர்ந்த செடி கொடிகளும் நிறைந்த இடமே காடாகும்.
  • ஆனால் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மணல் தீவில் அமைந்த இந்தக் காடு சற்று வேறுபட்டது.
  • மணல் தீவுகளில் மூங்கில் மட்டுமே வளர வாய்ப்புண்டு என்பர்.
  • ஆனால் பல்வகை மரங்கள் நிறைந்த இந்தக் காட்டை ஒரு தனி மனிதர் உருவாக்கியுள்ளார்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இந்திய வனமகன் ஜாதவ்பயோங்

7TH TAMIL இந்திய வனமகன்
7TH TAMIL இந்திய வனமகன்
  • “இந்திய வனமகன்” என அழைக்கப்படுபவர் = ஜாதவ்பயோங்.
  • ஊர் = அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்விராட் மாவட்டம்.
  • பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மிகப்பெரிய தீவில் முப்பது ஆண்டுகள் தனது கடின உழைப்பால் ஒரு காட்டை உருவாக்கியவர்.
  • அக்காட்டிலேயே தமது வாழ்வைக் கழித்துக் கொண்டிருப்பவர்.
  • தீவில் தனி ஆளாக மூங்கில் மரங்களை கொண்டு வந்து நட்டு வளர்க்கத் துவங்கினார்.
  • தீவில் மரத்தை வளர்ப்பதே தனது முழுநேர பணியாக்கிக் கொண்டார்.
  • அசாம் வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர் “ஜாதுநாத்” அவர்களின் யோசனையின் படி, மணல் பரப்பில் மரங்களை வளர்க்க வேண்டுமானால், மண்ணின் தன்மையை மாற்ற முடிவு செய்து, அங்கு மண்புழுக்கள் மற்றும் சிவப்பு கட்டெறும்புகளை கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
  • கால்நடைகளை வளர்ப்பது தான் ஜாதவ்பயோங்கின் வேலை ஆகும். அவற்றின் சாணத்தை தினந்தோறும் கொண்டு வந்து தீவில் உரங்களாக செடிகளுக்கு இட்டார்.
  • காடுகளில் மரங்கள் வளரத் துவங்கிய பொழுது, பறவைகள் வந்து தங்கத் துவங்கின.
  • பறவைகளின் எச்சத்தால் பரவிய விதைகள் இந்தக் காடு வளர மேலும் துணை புரிந்தன.
  • தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று ஜாதவ்பயோ கூறுவது = தான் வளர்த்த காட்டிற்கு முதல் முறையாக யானைகள் வந்த தினத்தை தன் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தினம் என்று கூறுகிறார்.
  • “காட்டின் வளம்” என்று குறிப்பிடப்படும் விலங்கு = புலிகள்.
  • ஜாதவ்பயோவின் காட்டிற்கு இறுதியாக “காட்டின் வளம்” எனப்படும் புலிகளும் வந்து தங்கின.
  • புலிகள் வந்த பிறகே காட்டின் உணவுச்சங்கிலி முழுமை அடைந்ததாக ஜாதவ்பயோ கூறுகிறார்.
  • ஜாதவ்பயோ அவர்களின் காட்டை பற்றி கேட்டு அங்கு வந்த வனவிலங்கு ஆர்வலர் = ஜிட்டுகலிட்டா..
  • ஜாதவ்பயோவின் காட்டை பற்றி பிரபல ஆங்கில நாளிதளான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதழில் வெளிவந்தது.

இந்திய வனமகன்

  • 2012 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு “இந்திய வனமகன்” (Forest Man of India) என்னும் பட்டதை வழங்கியது.
  • 2015 ஆம் ஆண்டு ஜாதவுக்கு இந்திய அரசின் சார்பில் “பத்மஸ்ரீ” விருது வழங்கப்பட்டது.
  • கௌஹாத்தி பல்கலைக்கழகம் சார்பில் ஜாதவுக்கு “மதிப்புறு முனைவர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

 

 

7TH TAMIL

 

Leave a Reply