பதினோராம் திருமுறை

பதினோராம் திருமுறை

பதினோராம் திருமுறை

பதினோராம் திருமுறை

  • 12 பேர் பாடியுள்ளனர்.
  • மொத்தம் 40 நூல்கள் உள்ளன.
  • 1400 பாடல்கள் உள்ளன.
  • இதனை “பிரபந்தமாலை” என்றும் அழைப்பர்.

காரைக்கால் அம்மையார்

  • இவரின் இயற்பெயர் = புனிதவதி
  • பிறந்த ஊர் = காரைக்கால்
  • கணவன் = வணிகன் பரமதத்தன்
  • திருவாலங்காட்டில் தலையால் தவழ்ந்து சென்று இறைவனை வழிப்பட்டவர்.
  • இவர் பாடல்கள் மட்டுமே “மூத்த திருப்பதிகம்” என்று சிறப்பிக்கப்படுகிறது
  • கட்டளைக் கலித்துறை என்ற புதுவகை யாப்பைப் படைத்தவர்
  • ஒரு பொருளைப் பல பாடலில் பாடும் பதிக மரபை முதன் முதலாக தொடங்கி வைத்தவர்.
  • அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.
  • இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்.
  • கோயிலில் நாயன்மார்கள் எல்லாம் நின்ற கோலத்தில் இருக்க இவர் மட்டும் அமர்ந்த கோலத்தில் இருக்கும் சிறப்பு பெற்றவர்.
  • இவர் தலையால் நடந்த திருவாலங்காட்டில் கால்பதிக்க அஞ்சி சம்பந்தர் ஊர் வெளியில் தங்கினார்.
  • இவர் பாடியவை = திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி
  • இறைவனிடம் “பேய்” உருவம் வேண்டி கேட்டவர்.
  • இவரின் பாடல்கள் சமய மறுமலர்ச்சிக்கு முன்னோடியாகும்

சேரமான் பெருமாள் நாயனார்

  • இவர் பாடியவை = பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருகைலாய ஞான உலா
  • இவரின் இயற் பெயர் = பெருமாக்கோதையார்
  • இவர் சுந்தரரின் நண்பர்
  • இவரை “கழறிற்றறிவார்” என அழைக்கப்படுவார்
  • இவரின் “திருகைலாய ஞான உலா” தமிழின் முதல் உலா நூல். இதனை ”தெய்வீக உலா” அல்லது “ஆதி உலா” என அழைப்பர்
  • இவர் சேர மரபினர்

நம்பியாண்டார் நம்பி

  • இவர் பாடிய நூல்கள் ஒன்பது
  • “தமிழ் வியாசர்” எனப்படுபவர் இவர்.
  • இவரே திருமுறைகளைத் தொகுத்தவர்.
  • இவரின் ஊர் = திருநாரையூர்

 

Leave a Reply