7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்

7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்

7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்

7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்

  • ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள்.
  • இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு
  • இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

ஓரெழுத்து ஒருமொழி

  • தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டவர் = பவணந்தி முனிவர்.
  • தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிடும் நூல் = நன்னூல்.
  • “நன்னூல்” எனும் நூலின் ஆசிரியர் = பவணந்தி முனிவர்.
  • நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை = 42.
  • நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகளுள்,
    • 40 = நெடில் எழுத்துக்கள்
    • 2 = குறில் எழுத்துக்கள் (நொ,து)
  • நொ,து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.

ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்

7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
  1. ஆ = பசு
  2. ஈ = கொடு
  3. ஊ = இறைச்சி
  4. ஏ = அம்பு
  5. ஐ = தலைவன்
  6. ஓ = மதகுநீர் தாங்கும் பலகை
  7. கா = சோலை
  8. கூ = பூமி
  9. கை = ஒழுக்கம்
  10. கோ = அரசன்
  11. சா = இறந்துபோ
  12. சீ = இகழ்ச்சி
  13. சே = உயர்வு
  14. சோ = மதில்
  15. தா = கொடு
  16. தீ = நெருப்பு
  17. தூ = தூய்மை
  18. தே = கடவுள்
  19. தை = தைத்தல்
  20. நா = நாவு
  21. நீ = முன்னிலை ஒருமை
  22. நே = அன்பு
  23. நை = இழிவு
  24. நோ = வறுமை
  25. பா = பாடல்
  26. பூ = மலர்
  27. பே = மேகம்
  28. பை = இளமை
  29. போ = செல்
  30. மா = மாமரம்
  31. மீ = வான்
  32. மூ = மூப்பு
  33. மே = அன்பு
  34. மை = அஞ்சனம்
  35. மோ = மோத்தல்
  36. யா = அகலம்
  37. வா = அழைத்தல்
  38. வீ = மலர்
  39. வை = புல்
  40. வௌ = கவர்
  41. நொ = நோய்
  42. து = உண்

பகுபதம் என்றால் என்ன

  • சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர்.
  • பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.
  • எ.கா:
    • வேலன், படித்தான்
  • வேலன் என்னும் சொல்லை வேல் + அன் எனப் பிரிக்கலாம்.
  • படித்தான் என்னும் சொல்லை படி + த் + த் + ஆன் எனப் பிரிக்கலாம்.

பகுபதம் எத்தனை வகைப்படும்

  • பகுபதம் இரண்டு வகைப்படும். அவை,
    • பெயர்ப் பகுபதம்
    • வினைப் பகுபதம்

பெயர்ப் பகுபதம் என்றால் என்ன

  • பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும்.

பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்

  • பெயர்ப் பகுபதம் ஆறு வகைப்படும்.
  • இதனை, பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர்.
  • எ.கா:
    • பொருள் – பொன்னன் (பொன் + அன்)
    • இடம் – நாடன் (நாடு + அன்)
    • காலம் – சித்திரையான் (சித்திரை + ஆன்)
    • சினை – கண்ணன் (கண் + அன்)
    • பண்பு – இனியன் (இனிமை + அன்)
    • தொழில் – உழவன் (உழவு + அன்)

வினைப் பகுபதம் என்றால் என்ன

  • பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
  • எ.கா:
    • உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்

பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்

  • பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை,
    • பகுதி
    • விகுதி
    • இடைநிலை
    • சந்தி
    • சாரியை
    • விகாரம்

பகுதி என்றால் என்ன

  • பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும்.
  • வினைப்பகுபதத்தின் பகுதி கட்டளையாகவே அமையும்.

விகுதி என்றால் என்ன

  • பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.

இடைநிலை என்பது யாது

  • பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
  • காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு = இடைநிலை.

சந்தி என்பது யாது

  • பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.

சாரியை என்றால் என்ன

  • பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.

விகாரம் என்றால் என்ன

  • பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.

பகுபத உறுப்புகள் எடுத்துக்காட்டு

  • வந்தனன் – வா(வ) + த் (ந்) + த் + அன் + அன்
    • வா = பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
    • த் = சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்
    • த் = இறந்தகால இடைநிலை
    • அன் = சாரியை
    • அன் = ஆண்பால் வினைமுற்று விகுதி

பகாப்பதம் என்றால் என்ன

  • பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.
  • பகாப்பதம் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.
  • எ.கா:
    • மரம், கழனி, உண், எழுது
  • இவற்றை மேலும் சிறிய உறுப்புகளாகப் பிரிக்க முடியாது.

பகாப்பதம் எத்தனை வகைப்படும்

  • பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,
    • பெயர்ப் பகாப்பதம்
    • வினைப் பகாப்பதம்
    • இடைப் பகாப்பதம்
    • உரி பகாப்பதம்
  • எ.கா:
    • பெயர்ப் பகாப்பதம் = நிலம், நீர், நெருப்பு, காற்று
    • வினைப் பகாப்பதம் = நட, வா, படி, வாழ்
    • இடைப் பகாப்பதம் = மன், கொல், தில், போல்
    • உரிப் பகாப்பதம் = உறு, தவ, நனி, கழி

 

 

 

 

Leave a Reply