8TH TAMIL யாப்பு இலக்கணம்

8TH TAMIL யாப்பு இலக்கணம்

8TH TAMIL யாப்பு இலக்கணம்

8TH TAMIL யாப்பு இலக்கணம்

  • பாவலர்கள் தம் உள்ளத்தில் தோன்றும் உயர்ந்த கருத்துகளைப் பாடல்களாகப் படைக்கின்றனர்.
  • குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பர்
  • இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

யாப்பு இலக்கணம் என்றால் என்ன

  • மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் எனப்படும்.

யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்

  • யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு. அவை
    • எழுத்து
    • அசை
    • சீர்
    • தளை
    • அடி
    • தொடை.

யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை எத்தனை வகையாக பிரிப்பர்

  • யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை எத்தனை வகையாக பிரிப்பர் = மூன்று வகை. அவை,
    • குறில் = உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
    • நெடில் = உயிர்நெடில், உயிர்மெய் நெடில்
    • ஒற்று = மெய்யெழுத்து, ஆய்த எழுத்து

அசை என்றால் என்ன

8TH TAMIL யாப்பு இலக்கணம்
8TH TAMIL யாப்பு இலக்கணம்
  • ழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது அசை எனப்படும்.
  • அசை எத்தனை வகைப்படும்?
  • அசை இரண்டு வகைப்படும். அவை,
    • நேரசை
    • நிரையசை

நேரசை என்றால் என்ன

  • குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.
  • (எ.கா.)
    • ந, நம், நா, நாம்.

நிரையசை என்றால் என்ன

  • இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.
  • (எ.கா.)
    • கட, கடல், கடா, கடாம்.

சீர் என்றால் என்ன

8TH TAMIL யாப்பு இலக்கணம்
8TH TAMIL யாப்பு இலக்கணம்
  • ஓர்அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர்.
  • சீர் நான்கு வகைப்படும்.
  • சீர்களை ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என வகைப்படுத்துவர்.

தளை என்றால் என்ன

  • சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.
  • முதல் சீரின் இறுதியிலும் வரும்சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகை அசைகள் என்பதன் அடிப்படையில், தளைகள் ஏழு வகைப்படும்.
  • தளை ஏழு வகைப்படும்.

அடி என்றால் என்ன

  • இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி ஆகும்.
  • அடி எத்தனை வகைப்படும் = அடி ஐந்து வகைப்படும்.

தொடை என்றால் என்ன

  • செய்யுளில் ஓசைஇன்பமும் பொருள்இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும்.
  • தொடை எத்தனை வகைப்படும் = தொடை எட்டு வகைப்படும்.
    • முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
    • இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
    • இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
    • ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை.

பா வகைகள் எத்தனை வகைப்படும்

  • பா நான்கு வகைப்படும்.
  • அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.
  • வெண்பா = வெண்பா செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.
  • ஆசிரியப்பா = ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.
  • கலிப்பா = கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது.
  • வஞ்சிப்பா = வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.

 

 

Leave a Reply