8TH TAMIL புணர்ச்சி

8TH TAMIL புணர்ச்சி

8TH TAMIL புணர்ச்சி

8TH TAMIL புணர்ச்சி

  • தமிழ், அமுதம் ஆகிய சொற்களை சேர்த்து சொன்னால் தமிழமுதம் என்று ஒலிக்கப்படும்

நிலைமொழி, வருமொழி

  • சொல்லில் முதலில் உள்ள சொல்லை நிலைமொழி என்றும், பின்னால் வந்து சேரும் சொல்லை வருமொழி என்று கூறுவார்.
  • எ.கா
    • தமிழமுது
    • தமிழ் = நிலைமொழி
    • அமுது = வருமொழி

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

புணர்ச்சி என்றால் என்ன

  • சொற்கள் சேரும் பொழுது நிலைமொழியின் இறுதி எழுதும், வருமொழியின் முதல் எழுதும் இணையும்.
  • நிலைமொழியின் ஈறும் (இறுதி எழுத்து), வருமொழியின் முதலும் இணைவதைப் “புணர்ச்சி” என்கிறோம்.

உயிரீற்றுப் புணர்ச்சி என்றால் என்ன

8TH TAMIL புணர்ச்சி
8TH TAMIL புணர்ச்சி
  • நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • சிலை + அழகு = சிலையழகு
  • இதில் “லை” (ல் + ஐ) ஆனது, நிலைமொளியான சிலை என்பதன் இறுதி எழுத்தாகும்.

மெய்யீற்றுப் பௌணர்ச்சி என்றால் என்ன

8TH TAMIL புணர்ச்சி
8TH TAMIL புணர்ச்சி
  • நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • மண் + அழகு = மண்ணழகு
  • இதில் நிலைமொழியின் இறுதி எழுத்து “ண்” ஆகும்.

உயிர்முதல் புணர்ச்சி என்றால் என்ன

8TH TAMIL புணர்ச்சி
8TH TAMIL புணர்ச்சி
  • வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால், அது “உயிர்முதல் புணர்ச்சி” எனப்படும்.
  • எ.கா:
    • பொன் + உண்டு = பொன்னுண்டு

மெய்முதல் புணர்ச்சி என்றால் என்ன

  • வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால், அது “மெய்முதல் புணர்ச்சி” எனப்படும்.
  • எ.கா:
    • பொன் + சிலை = பொற்சிலை (சி = ச் + இ)

இயல்பு புணர்ச்சி என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
  • எ.கா:
    • தாய் + மொழி = தாய்மொழி

விகாரப் புணர்ச்சி என்றால் என்ன

  • இரண்டு சொற்கள் இணையும் பொழுது, நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின் அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்

  • விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும். அவை,
    • தோன்றல் விகாரம்
    • திரிதல் விகாரம்
    • கெடுதல் விகாரம்

தோன்றல் விகாரம் என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஒரு எழுத்து தோன்றுவது “தோன்றல் விகாரம்” எனப்படும்.
  • எ.கா:
    • தமிழ் + தாய் = தமிழ்த்தாய்

திரிதல் விகாரம் என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது “ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது” திரிதல் விகாரம் எனப்படும்.
  • எ.கா:
    • வில் + கொடி = விற்கொடி

கெடுதல் விகாரம் என்றால் என்ன

  • நிலைமொழியும் வருமொழியும் இணையும் பொது “ஓர் எழுத்து மறைவது” கெடுதல் விகாரம் எனப்படும்.
  • எ.கா:
    • மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி.

ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்தல்

  • இரண்டு சொற்கள் இணையும் போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு.
  • எ.கா:
    • நாடகம் + கலை = நாடகக்கலை
  • இங்கு,
    • கெடுதல் விகாரம் படி = நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது
    • தோன்றல் விகாரம் படி = க் என்னும் மெய் எழுத்து தோன்றியது.

 

 

Leave a Reply