10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்

10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்

10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்
10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்

10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்

  • தமிழர் பொருள் ஈட்டி அறம்செய்து இன்புற்றனர்.
  • இல்வாழ்க்கையை அறவாழ்க்கையாகக் கொண்டனர்.
  • உலகே பரிசாகக் கிடைத்தாலும் பழிதரும் செயல்களைச் செய்ய மறுத்தனர்.
  • சங்க காலத்தில் அறத்தை மனித உறவின் மையமாகக் கொண்டிருந்தனர்.
  • சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம், சங்ககாலம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சங்க கால அறங்கள்

  • மனிதர்கள் அனைவரும் பொதுவிதியான “அறத்தை” ஏற்க வேண்டும்.
  • சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர்.
  • அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை.
  • ஆனால், சங்க கால அறங்கள் இயல்பானவை, சமய சார்பற்றவை.

திறனாய்வாளர் ஆர்னால்டு

  • “கவிதை வாழ்க்கையின் திறனாய்வு” என்று கூறியவர் = திறனாய்வாளர் ஆர்னால்டு.

சங்க அறங்கள்

  • சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன.
  • சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல.

அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை

10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்
10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்
  • அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என சங்ககால மக்கள் நினைத்தனர்.
  • இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கு கூடாது எனக் கூறப்பட்டது.
  • இதனை,

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”

–    புறநானூறு

  • இப்புறநானூற்று பாடலின் மூலம் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய் பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அறம்

  • சங்ககாலத்தில் அரசனின் அறங்களாக குறிக்கப்பட்டவை = செங்கோல், வெண்கொற்றக்குடை.
  • “குற்றங்கள், அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்று கூறிய புலவர் = ஊன் பொதிப் பசுங்குடையார்.
  • மதுரைக்காஞ்சி நூலில் அமைச்சர்களை பற்றி “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும்” அமைச்சர் கடமை எனக் கூறுகிறது.

நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும்

–    மதுரைக்காஞ்சி

  • “செம்மை சான்ற காவிதி மாக்கள்” என்று அமைச்சர்களை “மாங்குடி மருதனார்” போற்றுகிறார்.
  • “காவிதி மாக்கள்” என்று மாங்குடி மருதனார் குறிப்பிடுவது = அமைச்சர்கள்.

அறம் கூறும் அவையம்

  • அறம் கூறும் அவையம் பற்றி “அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்” என்று புறநானூறு கூறுகிறது.
  • “அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
  • இலக்கியங்கள் குறிப்பிடும் சிறப்பு பெற்ற அவையம் = உறையூரில் இருந்தது.
  • மதுரையில் இருந்த அவையம் பற்றி குறிப்பிடும் நூல் = மதுரைக்காஞ்சி.

போர் அறம்

10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்
10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்
  • போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது.
  • போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு புறப்பாடல் கூறுகிறது.
  • போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் எனக் கூறும் நூல் = புறநானூறு.
  • தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

எறியார் எறிதல் யாவணது எறிந்தோர்

எதிர்சென்று எறிதலும் செல்லான்

–    புறம் 301.

  • தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது எனக் கூறிய புலவர் = ஆவூர் மூலங்கிழார்.
  • தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது எனக் கூறியுள்ள நூல் = புறநானூறு
  • “எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.

கொடை

  • ஒரு மனிதன் தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி.
  • அதாவது தன் மகிழ்ச்சியை மறப்பதுதான் மகிழ்ச்சி.

செல்வத்துப் பயனே ஈதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே

–    புறம் 189:7-8

  • “செல்வத்துப் பயனே ஈதல்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = புறநானூறு.
  • “செல்வத்துப் பயனே ஈதல்” என்ற அடிகளை கூறிய புலவர் = மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்
  • ஏழு கொடை வள்ளல்கள் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ள சங்க இலக்கியம் = சிறுபாணாற்றுப்படை.
  • எழுவரின் கொடைப் பெருமை சிறுபாணாற்றுப்படையிலும் புறநானூற்றின் பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே உள்ளன.
  • பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது.
  • வள்ளல்கள் “இல்லோர் ஒக்கல் தலைவன்”, “பசிப்பிணி மருத்துவன்” என்றெல்லாம் போற்றப்பட்டனர்.

பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தன்

  • வழங்குவதற்குப் பொருள் உள்ளதா? என்று கூடப் பார்க்காமல் கொடுக்கும் பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை நக்கீரர் பாராட்டுகிறார்.
  • பிடவூர்க்கிழான் மகன் பெருஞ்சாத்தனை பாராட்டியவர் = நக்கீரர்.

புலவர் பெரும்பதுமனார்

  • வள்ளலின் வறுமை இரவலனின் வறுமை என்று பெரும்பதுமனார் குறிப்பிடுகிறார்.

வள்ளல் அதியன்

  • உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார்.
  • “உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன்” என்று யாரை ஔவையார் குறிபிடுகிறார் = வள்ளல் அதியன்,

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்தல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இயல்பு என்கிறார் நச்செள்ளையார்.
  • இரவலர் வராவிட்டாலும் அவர்களைத் தேடி வரவழைத்து கொடுப்பவன் என்று நச்செள்ளையார் குறிப்பிடுவது = ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

வள்ளல் பேகன்

  • பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன் என்கிறார் பரணர்.
  • “மறுமை நோக்கிக் கொடுக்காதவன்” என்று பரணர் குறிப்பிடுவது = வள்ளல் பேகனை.
  • “பேகன் மறுமை நோக்கிக் கொடுக்காதவன்” எனக் குறிப்பிடும் புலவர் = பரணர்.

வள்ளல் குமணன்

  • தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது, தான் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் எனக் குமணன் வருந்தியதாகப் பெருந்தலைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார்.

மலையமான் திருமுடிக்காரி

  • எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாராட்டுகிறார்.
  • எல்லாவற்றையும் கொடுப்பவன் என கபிலர் பாராட்டுவது = மலையமான் திருமுடிக்காரியை.
  • எல்லாவற்றையும் கொடுப்பவன் மலையமான் திருமுடிக்காரி எனக் கூறிய புலவர் = கபிலர்.

அக இலக்கியங்களில் ஈதல்

  • ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது என்றெல்லாம் கலித்தொகையில் கூறப்பட்டுள்ளது.
  • ஈதல் பற்றி குறிப்பிட்டுள்ள அக இலக்கிய நூல் = கலித்தொகை.
  • ஈயாமை இழிவு, இரப்போர்க்கு ஈயாது வாழ்தலைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது எனக் கூறப்பட்டுள்ள அக இலக்கியம் = கலித்தொகை.

பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம்

  • வள்ளல்கள் மட்டுமன்றிப் புலவர்களும் ஈந்து மகிழ்ந்ததை இலக்கியம் பதிவு செய்துள்ளது.
  • தான் பெற்றதைப் பிறருக்கு வழங்கும் பெருஞ்சித்திரனாரின் பேருள்ளம் புறநானூற்றில் புலப்படுத்தப்பட்டிருக்கிறது.

உதவி

10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்
10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்
  • உதவி செய்தலை ஈழத்துப் பூதன் தேவனார் ‘உதவியாண்மை’ என்று குறிப்பிடுகிறார்.
  • உதவி செய்தலை “உதவியாண்மை” எனக் குறிப்பிட்ட புலவர் = ஈழத்துப் பூதன் தேவனார்.

பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல்

சான்றவர்க்கு எல்லாம் கடன்

–    கலி.139

  • “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = கலித்தொகை.
  • “பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன்” என்று குறிப்பிடும் புலவர் = நல்லந்துவனார் கலித்தொகையில் குறிப்பிட்டுள்ளார்.
  • பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதி, உதவுதல் பற்றி நல்லந்துவனார் கலித்தொகையில் குறிப்பிட்டுள்ளார்.

நல்வேட்டனார்

10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்
10TH TAMIL சங்க இலக்கியத்தில் அறம்
  • ‘உண்மையான செல்வம் பிறர்துன்பம் தீர்ப்பது தான்’ என்கிறார் நல்வேட்டனார்.
  • “’உண்மையான செல்வம் பிறர்துன்பம் தீர்ப்பது தான்” எனக் கூறியவர் = நல்வேட்டனார்.

சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே

–    நற்றினை. 210

  • “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நற்றிணை.

பெருங்கடுங்கோ

  • உறவினர் கெட, வாழ்பவனின் பொலிவு அழியும் என்று பெருங்கடுங்கோ குறிப்பிடுகிறார்.
  • இதனால்தான் ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு’ என்கிறது தமிழ் இலக்கியம்.

சீன நாட்டுத் தாவோயியம்

  • ‘நிறைவடைகிறவனே செல்வன்’ என்று கூறுகிறது சீன நாட்டுத் தாவோயியம்.

வாய்மை

  • வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யாச் செந்நா”,”பொய்படுபறியா வயங்கு செந்நா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.
  • நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள்.
  • உண்மையின் கதவையும், துன்பத்தின் கதவையும் திறப்பது = நாக்கு.

பிழையா நன்மொழி

  • ‘பிழையா நன்மொழி’ என்று வாய்மையை நற்றிணை குறிப்பிடுகின்றது
  • “பிழையா நன்மொழி” என்று நற்றிணை குறிப்பிடுவது = வாய்மையை
  • “பிழையா நன்மொழி” எனக் குறிப்பிடும் நூல் = நற்றிணை.

முதல் தரமான அறங்கள்

  • மூன்றாம் தரமான அறங்கள் = தாம் சிந்திக்காமல் பிறர் சொல்ல அறியும் .அறம்
  • இரண்டாம் தரமான அறங்கள் = சிந்தித்து அறிந்து கொள்ளும் அறம்.
  • முதல் தரமான அறங்கள் = இயல்பாக அறியும் அறம்.
  • சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள், முதல் தரமானவை.

போதிதர்மர்

  • கி.பி.(பொ.ஆ.) ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சி மாநகரத்துச் சிற்றரசர் ஒருவர் போதிதர்மர் என்னும் சமயப்பெயர்பூண்டு சீனாவுக்குச் சென்றார்.
  • பௌத்த சமயத் தத்துவத்தின் ஒரு பிரிவைப் போதித்தார்.
  • அதிலிருந்து உருவானதே “ஜென்” தத்துவம்.
  • இது, பின்னர் ஜப்பான் முதலிய நாடுகளுக்கும் பரவிச் செழித்து விளங்கியது.
  • போதி தருமருக்குச் சீனர்கள் கோவில் கட்டி சிலை வைத்து இன்றளவும் வணங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply