தமிழ் நூல்களில் முதன் முதல்

தமிழ் நூல்களில் முதன் முதல்

தமிழ் நூல்களில் முதன் முதல்
தமிழ் நூல்களில் முதன் முதல்

தமிழ் நூல்களில் முதன் முதல்

  • முதல் குறவஞ்சி நூல் = திருக்குற்றால குறவஞ்சி (எழுதியவர் = திரிகூடராசப்பக் கவிராயர்)
  • முதல் உலா நூல் = திருக்கையிலாய ஞான உலா (இதனை ”தெய்வீக உலா” அல்லது “ஆதி உலா” என் அழைப்பர். எழுதியவர் = சேரமான் பெருமாள் நாயினார்)
  • தமிழின் முதல் நாவல் = பிரதாப முதலியார் சரித்திரம் (எழுதியவர் = மாயூரம் வேதநாயகம் பிள்ளை)

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  • தமிழின் முதல் இசைபாடல் நூல் = பரிபாடல்
  • தமிழின் முதல் காப்பியம் = சிலப்பதிகாரம்
  • தமிழின் முதல் காப்பியம் = மணிமேகலை
  • முதல் விருத்தப்பா காப்பியம் = சீவக சிந்தாமணி
  • தமிழின் முதல் தருக்க நூல் = நீலகேசி
  • சைவசமயத்தின் முதல் நூல் = திருமூலரின் திருமந்திரம்
  • முதல் சித்த நூல் = திருமூலரின் திருமந்திரம்
  • தமிழின் முதல் கள ஆய்வு நூல் = பெரியபுராணம்
  • முதல் பரணி நூல் = கலிங்கத்துப்பரணி
  • முதல் தூது நூல் = நெஞ்சு விடு தூது (எழுதியவர் = உமாபதி சிவம்)
  • முதல் கலம்பக நூல் = நந்திக்கலம்பகம் (எழுதியவர் = தெரியவில்லை)
  • முதன் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் = குறுந்தொகை
  • தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் = மனோன்மணீயம்.
  • தமிழில் அச்சிடப்பட்ட முதல் இலக்கண நூல் = நன்னூல் (1835)
  • தமிழில் வெளிவந்த முதல் ஹைக்கூ நூல் = 1984 ஆகஸ்ட்டில் ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் “புள்ளிப் பூக்கள்” எனும் தனது ஹைக்கூ நூலை வெளியிட்டார்.
  • தமிழ் மொழியில் வெளி வந்த முதல் ஹைக்கூ கவிதை இதழ் = கரந்தடி
  • தமிழில் வெளிவந்த முதல் சென்ரியு கவிதை நூல் = ஈரோடு தமிழன்பன் அவர்களின் “ஒரு வண்டி சென்ரியு” (2001)
  • தமிழின் முதல் லிமரைக்கூ கவிதை நூல் = ஈரோடு தமிழன்பனின் ”சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” நூலாகும்.
  • முதன் முதல் புத்தக வடிவம் பெற்ற சங்க இலக்கியம் = திருமுருகாற்றுப்படை
  • தமிழில் புதுக்கவிதை பற்றிய முதல் ஆய்வு நூல் = யாப்பும் கவிதையும் (எழுதியவர் சி.மணி)
  • தமிழில் தோன்றிய முதல் உரைநூல் = இறையனாரகப்பொருள் உரை
  • தமிழில் முதன் முதலாக அகராதி என்ற சொல்லைப் பயன்படுத்திய நூல் = 1594 இல் எழுதப்பட்ட “அகராதி நிகண்டு”. இதன் ஆசிரியர் = இரேவணசித்தர்.
  • தமிழில் தோன்றிய முதல் நிகண்டு = சேந்தன் திவாகரம் (ஆசிரியர் = திவாகர முனிவர்)
  • இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் = பெங்கால் கெஜட் (1780) (கல்கத்தா ஜெனரல் அட்வைசர்)
  • இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆங்கில வார இதழ் = ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் துவக்கிய “மெட்ராஸ் கூரியர்” (Madras Courier)
  • 1850 ஆம் ஆண்டு முதல் தில்லியிலிருந்து வெளியான, ‘தில்லி ஸ்கெட்ச் புக்’ (Delhi Sketch Book), என்ற இதழ்தான் இந்தியாவில் முதன்முதலில் கருத்துப்படங்களை வெளியிட்ட இதழாகும்.
  • தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் = மதராஸ் மெயில் (1868)
  • தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் = சுதேசமித்திரன் (1882)
  • தமிழில் வெளிவந்த முதல் வார இதழ் = பெர்சிவல் பாதிரியாரின் “தினவர்த்தமானி”
  • தமிழின் முதல் சரித்திர நாவல் = கல்கியின் “பார்த்திபன் கனவு”
  • சாகித்திய காதமி விருது பெற்ற தமிழின் முதல் நாவல் = கல்கியின் “அலை ஓசை”.
  • வெளிநாட்டு (அயல்) மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல் = தொ.மு.சிதம்பர ரகுநாதனின் `பஞ்சும் பசியும்’ நாவல்.
  • இலக்கிய விமர்சனம் பற்றிய தமிழின் முதல் நூல் = தொ.மு.சிதம்பர ரகுநாதனின் “இலக்கிய விமர்சனம்”
  • “கரிசல் வட்டார அகராதி” என்று மக்கள் பேசும் சாதாரண தமிழுக்கு அகராதி உருவாக்கிய முதல் அறிஞர் = கி.ராஜநாராயணன்
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற முதல் கட்டுரை தொகுப்பு நூல்? = ரா.பி. சேதுப்பிள்ளை அவரால் இயற்றிய தமிழ் இன்பம் (1955).
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் புதினம் (நாவல்)? = கல்கி இயற்றிய “அலையோசை” (1956)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் உரைநடை நூல்? = ராஜாஜி எழுதிய “சக்கரவர்த்தி திருமகள்” (1958)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் பயண நூல்? = சோமு அவர்கள் இயற்றிய “அக்கரைச் சீமையில்” (1962)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் வாழ்க்கை வரலாற்று நூல்? = பி.ஸ்ரீ. ஆச்சார்யா அவர்கள் இயற்றிய “ஸ்ரீ ராமானுஜர்” (1965)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய திறனாய்வு நூல்? = கி. வா. ஜெகந்நாதன் இயற்றிய “வீரர் உலகம்” (1967)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் கவிதை நூல்? = அ. சீனிவாச ராகவன் இயற்றிய “வெள்ளைப் பறவை” (1968)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் நாடக நூல்? = பாரதிதாசனின் “பிசிராந்தையார்” நாடகம் (1969)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் சிறுகதை தொகுப்பு நூல்? = கு. அழகிரிசாமியின் “அன்பளிப்பு” (1970)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் இலக்கிய வரலாறு நூல்? = பி.எஸ். ராமையா அவர்களின் “மணிக்கொடி காலம்” (1982)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் தன் வரலாறு நூல்? = லா.ச.ராமாமிர்தம் அவர்களின் “சிந்தாநதி” (1989)
  • தமிழில் சாகித்திய அகாதமி விருது பெற்ற வசன கவிதை நூல்? = அப்துல் ரகுமானின் “ஆலாபனை” (1999)
  • தமிழில் சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் விமர்சன நூல்? = தி.க. சிவசங்கரன் எழுதிய “விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள்” (2000).

 

 

 

 

 

Leave a Reply