6TH TAMIL ஆசியஜோதி

6TH TAMIL ஆசியஜோதி

6TH TAMIL ஆசியஜோதி

6TH TAMIL ஆசியஜோதி

  • இரக்கம் என்பது தலைசிறந்த பண்பு. மனிதரிடம் மட்டுமன்று, மற்ற எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ள வேண்டும்.
  • பிற உயிர்களைத் தம்முயிர் போல் எண்ணிக் காக்க வேண்டும்.
  • அதுவே சான்றோர் போற்றும் உயிர் இரக்கம் ஆகும்.
  • அவ்விரக்கமே மனித குலத்தை வாழ வைக்கிறது.
  • உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் புத்தர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கதைச் சுருக்கம்

  • அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் புத்தர்பிரான்.
  • பிம்பிசார மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.
  • அவற்றின் நடுவில் அடிபட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைப் புத்தர் தம் தோளில் சுமந்து சென்றார்.
  • யாகசாலையை அடைந்தார். மன்னனுக்கு அறவுரை கூறினார்.
  • நாடெங்கும் உயிர்க்கொலையைத் தடுத்து நிறுத்தினார்.
6TH TAMIL ஆசியஜோதி
6TH TAMIL ஆசியஜோதி

அருஞ்சொற்பொருள்

  • அஞ்சினர் = பயந்தனர்
  • கருணை = இரக்கம்
  • வீழும் = விழும்
  • ஆகாது = முடியாது
  • நீள்நிலம் = பரந்த உலகம்
  • முற்றும் = முழுவதும்
  • மாரி = மழை
  • கும்பி = வயிறு
  • பூதலம் = பூமி
  • பார் = உலகம்

தேசிக விநாயகனார் ஆசிரியர் குறிப்பு

6TH TAMIL ஆசியஜோதி
6TH TAMIL ஆசியஜோதி
  • தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர்.
  • முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.

ஆசிய ஜோதி நூல் குறிப்பு

  • ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது.
  • இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

 

 

Leave a Reply