6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்

6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்

6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்

6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்

  • கல்வி நிலையங்கள் காலந்தோறும் மாறி வருகின்றன.
  • தொடக்கத்தில் ஆசிரியரின் வீட்டிலேயே தங்கி மாணவர்கள் கல்வி கற்றனர்.
  • பிறகு நாள்தோறும் ஆசிரியர் வீட்டுக்குச் சென்று கல்வி கற்றனர்.
  • அதன் பிறகு பொதுவான ஓர் இடத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்பித்தனர்.
  • இவையே இன்றைய பள்ளிக்கூடங்கள் ஆகும்.
  • முன்பு ஒரு சில ஊர்களில் மட்டும் பள்ளிகள் இருந்தன.
  • இன்று பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • இத்தகைய கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் = கர்மவீரர் காமராசர் ஆவார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

கல்விக் கண் திறந்தவர்

  • கல்வித்துறை விதிகளை மாணவர்களின் நலனுக்காக மாற்றி, அவர்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிக்கூடங்களைத் திறக்கச் செய்த சிந்தனையாளர் = காமராசர்.
  • காமராசரை “கல்விக் கண் திறந்தவர்” என்று மனதார பாராட்டியவர் = தந்தை பெரியார்.

காமராசரின் சிறப்பு பெயர்கள்

6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்
6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்
  • பெருந்தலைவர்
  • படிக்காத மேதை
  • கர்மவீரர்
  • கருப்புக் காந்தி
  • ஏழைப்பங்காளர்
  • தலைவர்களை உருவாக்குபவர்

காமராசரின் கல்விப் பணிகள்

  • காமராசர் பதவி ஏற்ற உடனே, தமிழகத்தில் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டார்.
  • மாநிலம் முழுவதும் அனைவர்க்கும் கட்டாய இலவசக் கல்வி திட்டத்தை நடைமுறைப் படுத்தினார்.
  • மாணவர்கள் பசியை போக்க “மதிய உணவுத் திட்டத்தை” துவக்கி வைத்தார்.
  • பள்ளிகளில் மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை போக்க “சீருடைத்” திட்டத்தை அறிமுகம் செய்தார்.
  • பள்ளிகளின் வசதியைப் பெருக்க “பள்ளிச்சீரமைப்பு” மாநாடுகளை நடத்தினார்.
  • மாணவர்கள் உயர்கல்வி பெறப் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடைமருத்துவக் கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றைப் புதிதாகத் தொடங்கினார்.
  • தமிழ்நாட்டில் பல கிளை நூலகங்களைத் தொடங்கினார்.
6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்
6TH TAMIL கல்விக்கண் திறந்தவர்

காமராசருக்கு செய்யப்பட்ட சிறப்புகள்

  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம், விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
  • ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

 

 

 

 

Leave a Reply