10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்

10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்

10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்
10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்

10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்

  • “பொருள்” என்றால் = ஒழுக்கமுறை.
  • தமிழர்கள் வாழ்வியலை “அகம், புறம்” என இரண்டாக பிரித்திருந்தனர்.
  • அகம், புறம் ஆகியவற்றை விளக்கும் இலக்கணம் = பொருள் இலக்கணம்

அகத்திணை என்றால் என்ன

  • அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவு நிலைகளை கூறுவது அகத்திணை எனப்படும்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அகத்திணை எத்தனை வகைப்படும்

  • அகத்திணை ஏழு வகைப்படும். அவை,
    • குறிஞ்சி
    • முல்லை
    • மருதம்
    • நெய்தல்
    • பாலை
    • கைக்கிளை
    • பெருந்திணை

அன்பின் ஐந்திணை என்பது யாது

  • அகத்திணையில் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணை எனப்படும்.
  • அன்பின் ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.

முதற்பொருள் என்பது யாது

முதற்பொருள் = நிலம் + பொழுது

  • முதற்பொருள் எனப்படுவது நிலமும், பொழுதும் ஆகும்.

ஐவகை நிலங்கள் யாவை

10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்
10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்
  • நிலம் ஐந்து வகைப்படும். அவை,
    • குறிஞ்சி = மலையும் மலை சார்ந்த இடமும்
    • முல்லை = காடும் காடு சார்ந்த இடமும்
    • மருதம் = வயலும் வயல் சார்ந்த இடமும்
    • நெய்தல் = கடலும் கடல் சார்ந்த இடமும்
    • பாலை = சுரமும் சுரம் சார்ந்த இடமும்

பொழுது எத்தனை வகைப்படும்

  • பொழுது இரண்டு வகைப்படும். அவை,
    • பெரும்பொழுது
    • சிறுபொழுது

பெரும்பொழுது என்றால் என்ன

  • பெரும்பொழுது = ஓராண்டின் ஆறு கூறுகள்.
  • ஓராண்டின் ஆறு கூறுகளை நமது முன்னோர் பெரும்பொழுது என வகைப்படுத்தி உள்ளனர். அவை,
    • கார்காலம் = ஆவணி, புரட்டாசி
    • குளிர்காலம் = ஐப்பசி, கார்த்திகை
    • முன்பனிக் காலம் = மார்கழி, தை
    • பின்பனிக் காலம் = மாசி, பங்குனி
    • இளவேனிற்காலம் = சித்திரை, வைகாசி
    • முதுவேனிற் காலம் = ஆனி, ஆடி

சிறுபொழுது என்றால் என்ன

  • சிறுபொழுது = ஒரு நாளின் ஆறு கூறுகள்.
  • ஒரு நாளின் ஆறு கூறுகளை நமது முன்னோர் சிறுபொழுது என வகைப்படுத்தி உள்ளனர். அவை,
    • காலை = காலை 6 மணி முதல் 10 மணி வரை
    • நண்பகல் = காலை 10 மணி முதல் 2 மணி வரை
    • எற்பாடு = பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
    • மாலை = மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
    • யாமம் = இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை
    • வைகறை = இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை.

எற்பாடு என்றால் என்ன

  • எல் + பாடு = எற்பாடு
  • “எல்” என்பதன் பொருள் = ஞாயிறு
  • “பாடு” என்பதன் பொருள் = மறையும் நேரம்.
  • “எற்பாடு” என்றால் = சூரியன் மறையும் நேரம்.

கருப்பொருள் என்றால் என்ன

  • ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு, உணவு, பூ, மரம், பறவை, ஊர் போன்றவை கருப்பொருள்கள் ஆகும்.

ஐந்திணை பொழுதுகள்

10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்
10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்

தினையும் பொழுதும்

திணை பெரும்பொழுது

சிறுபொழுது

குறிஞ்சி

குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்
முல்லை கார்காலம்

மாலை

மருதம்

ஆறு பெரும்பொழுதுகள் வைகறை
நெய்தல் ஆறு பெரும்பொழுதுகள்

எற்பாடு

பாலை

இளவேனில், முதுவேனில், பின்பனி

நண்பகல்

கருப்பொருள் அட்டவணை

10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்
10TH TAMIL அகப்பொருள் இலக்கணம்

கருப்பொருள்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
தெய்வம் முருகன் திருமால் இந்திரன் வருணன்

கொற்றவை

மக்கள்

வெற்பன், குறவர், குறத்தியர் தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் ஊரன், உழவர், உழத்தியர் சேர்ப்பன், பரதன், பரத்தியர் எயினர், எயிற்றியர்
உணவு மலைநெல், திணை வரகு, சாமை செந்நெல், வெண்ணெல் மீன், உப்புக்கு விற்ற பொருள்

சூறையாடலால் வரும் பொருள்

விலங்கு

புலி, கரடி, சிங்கம் முயல், மான், புலி எருமை, நீர்நாய் முதலை, சுறா வலியிழந்த யானை
பூ குறிஞ்சி, காந்தள் முல்லை, தோன்றி செங்கழுநீர், தாமரை தாழை, நெய்தல்

குரவம், பாதிரி

மரம்

அகில், வேங்கை கொன்றை, காயா காஞ்சி, மருதம் புன்னை, ஞாழல் இலுப்பை, பாலை
பறவை கிளி, மயில் காட்டுக்கோழி, மயில் நாரை, நீர்க்கோழி, அன்னம் கடற்காகம்

புறா, பருந்து

ஊர்

சிறுகுடி பாடி, சேரி பேரூர், மூதூர் பட்டினம், பாக்கம் குறும்பு
நீர் அருவிநீர், சுனைநீர் காட்டாறு மனைக்கிணறு, பொய்கை மணற்கிணறு, உவர்க்கழி

வற்றிய சுனை, கிணறு

பறை

தொண்டகம் ஏறு கோட்பறை மணமுழா, நெல்லரிக்கிணை மீன் கோட்பறை துடி
யாழ் குறிஞ்சி யாழ் முல்லை யாழ் மருத யாழ் விளரி யாழ்

பாலை யாழ்

பண்

குறிஞ்சிப் பண் முல்லைப்பண் மருதப்பண் செவ்வழிப்பண் பஞ்சுரப்பண்
தொழில் தேனெடுத்தல், கிழங்கு அகற்றுதல் ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் நெல்லரிதல், களை பறித்தல் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்

வழிப்பறி, நிறை கவர்தல்

 

 

Leave a Reply