11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்

  • இந்த உலகத்தை இழையிழையாகப் பிரித்தும் வகுத்தும் தொகுத்தும் விதவிதமான தூரங்களில் வைத்தும் கொடுத்தது மொழி.
  • சொற்கள் தொண்டையில் இருந்து எழுகின்றன.
  • அவற்றை ஏற்றம், இறக்கம், உச்சரிப்பு, வேகம், நிதானம், திருப்பித் திருப்பிச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மௌனம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்தி பொருள் வேறுபாடுகளை ஏற்படுத்த இயலும்.

எர்னஸ்ட் காசிரர்

  • மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக்கொள்கின்றன.
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்

நேரடி மொழி என்றால் என்ன

  • எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சு மொழி உணர்ச்சிக்கு மிக அருகில் உள்ளது.
  • பேச்சு மொழியில் கவிஞனின் கவிதைகள் அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.
  • பேச்சு என்பது தன்னைத் திறந்து கொள்கிற ஒரு செயல்பாடு.
  • சில கவிஞர்கள் தங்களுடைய கவிதைகளை எதிரில் இருக்கும் வாசகனுடன் பேசுவது போல் அமைப்பதே “நேரடி மொழி” என்பர்.
  • நேரடிமொழி எனப்படும் பேச்சுமொழிக்கு ஒரு போதும் பழமை தட்டுவதில்லை.

மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா

  • நேரடி மொழி எனப்படும் பேச்சு மொழித் தான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா.

மூவகை கவிஞர்கள்

  • பேச்சு மொழியைக் கவிதையில் பயன்படுத்துபவர்களில் மூன்று வகையினர் உள்ளனர்.

புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
  • வால்ட் விட்மன் அமெரிக்காவை சேர்ந்தவர்.
  • கவிதை, இதழாளர், கட்டுரையாளர் ஆவார்
  • புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்.
  • வால்ட் விட்மனின் புகழ்பெற்ற நூல் = புல்லின் இதழ்கள் (Leaves of Grases)

ஸ்டெஃபான் மல்லார்மே

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
  • இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்.
  • ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • இவரைப் புரிந்து கொள்வதன் மூலமே குறியீட்டியத்தையும் (Symbolism) புரிந்து கொள்ள முடியும்.

பாப்லோ நெரூடா

11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
11TH TAMIL பேச்சுமொழியும் கவிதைமொழியும்
  • தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் பிறந்தவர்.
  • இலத்தீன் அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்.
  • தன்னுடைய கவிதைகளுக்காக 1971 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.

கவிதை என்றால் என்ன

  • கவிதை என்பது ஒரு பொருளன்று; அது மொழிக்குள் உலகையும் உலகிற்குள் மொழியையும் முழுவதுமாக நுழைத்துவிடுவதற்காக முயகும் தொடர்ந்த ஒரு படைப்புச் செயல்பாடு.
  • எனவே, கவிதை என்பதே மொழிதான்.
  • கவிதைக்குள் உலவும் மொழியின் தர்க்கம் கவிதைக்கான உலகத்தைக் கட்டி எழுப்புகிறது.

கவிஞர் இந்திரன்

  • இவரின் இயற்பெயர் = இராசேந்திரன்
  • சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.
  • ஒரிய மொழிக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸின் “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்னும் நூலின் மொழிபெயர்ப்பு நூலுக்காக 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமியின் விருது பெற்றுள்ளார்.

கவிஞர் இந்திரனின் நூல்கள்

  • கவிதை நூல்கள் = முப்படை நகரம், சாம்பல் வார்த்தைகள்
  • கட்டுரை நூல்கள் = தமிழ் அழகியல், நவீன ஓவியம்

கவிஞர் இந்திரன் நடத்திய இதழ்கள்

  • வெளிச்சம்
  • நுண்கலை

 

 

 

 

 

 

 

Leave a Reply